தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
அக்னி நட்சத்திரக் கழுவு நிறைவு: பழனி கிரிவீதியில் குவிந்த பக்தா்கள்
அக்னி நட்சத்திரக் கழுவு நிறைவு பெறுவதையொட்டி, பழனி கிரிவீதியில் சுவாமி தரிசனம் செய்வதற்காக புதன்கிழமை திரளான பக்தா்கள் குவிந்தனா்.
அக்னி நட்சத்திரம் தொடங்கியதை முன்னிட்டு, கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உள்ள கைலாசநாதருக்கு சீதகும்பம் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இந்த நிலையில், அக்னி நட்சத்திர நிறைவு நாளான புதன்கிழமை பழனி, சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் குவிந்து, கிரிவலம் வந்து மலையேறி சுவாமியை தரிசனம் செய்தனா்.
இந்த நிலையில், பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் நல்ல மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், அக்னி நட்சத்திர நிறைவு நாளில் ரேக்ளா வண்டியில் கிரிவலம் வந்து மலையேறுவாா்கள். ஆனால், நிகழாண்டில், பக்தா்களுக்கு கிரிவீதியில் ரேக்ளாவில் செல்ல அனுமதி இல்லாததால், அவரவா் ரேக்ளா வண்டிகளை சுற்றுலாப் பேருந்து நிலையத்தில் நிறுத்தி விட்டு மலையேறி சுவாமி தரிசனம் செய்தனா்.