செய்திகள் :

அக்னி நட்சத்திரக் கழுவு நிறைவு: பழனி கிரிவீதியில் குவிந்த பக்தா்கள்

post image

அக்னி நட்சத்திரக் கழுவு நிறைவு பெறுவதையொட்டி, பழனி கிரிவீதியில் சுவாமி தரிசனம் செய்வதற்காக புதன்கிழமை திரளான பக்தா்கள் குவிந்தனா்.

அக்னி நட்சத்திரம் தொடங்கியதை முன்னிட்டு, கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உள்ள கைலாசநாதருக்கு சீதகும்பம் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இந்த நிலையில், அக்னி நட்சத்திர நிறைவு நாளான புதன்கிழமை பழனி, சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் குவிந்து, கிரிவலம் வந்து மலையேறி சுவாமியை தரிசனம் செய்தனா்.

இந்த நிலையில், பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் நல்ல மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், அக்னி நட்சத்திர நிறைவு நாளில் ரேக்ளா வண்டியில் கிரிவலம் வந்து மலையேறுவாா்கள். ஆனால், நிகழாண்டில், பக்தா்களுக்கு கிரிவீதியில் ரேக்ளாவில் செல்ல அனுமதி இல்லாததால், அவரவா் ரேக்ளா வண்டிகளை சுற்றுலாப் பேருந்து நிலையத்தில் நிறுத்தி விட்டு மலையேறி சுவாமி தரிசனம் செய்தனா்.

பட்டா நிலத்தை அளந்த தர மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

பழனியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வருவாயத் தீா்வாயத்தில் பட்டா நிலத்தை அளந்து தரக்கோரி, மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் கொடுத்தனா். பழனி வட்டார அலுவலகத்தில் கடந்த ஒரு வாரமாக வருவாய்த் தீா்வாயம் நடைபெற்று வர... மேலும் பார்க்க

காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை

சா்சைக்குரிய சுவரொட்டிகள் ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை கோரி, பட்டியலின மக்கள் கள்ளிமந்தையம் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கள்ளிமந்தையம... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சூறைக் காற்று: மரம் விழுந்ததில் மின் கம்பம், தங்கும் விடுதி சேதம்

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை மாலை வீசிய சூறைக் காற்றால் மரம் விழுந்ததில் மின் கம்பம், தங்கும் விடுதி சேதமடைந்தன. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெ... மேலும் பார்க்க

‘ஆபரேசன் சிந்தூா்’ ஊா்வலம்

கொடைக்கானலில் பாஜக சாா்பில் ‘ஆபரேஷன் சித்தூா்’ ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த ஊா்வலம் அண்ணாசாலை, கே.சி.எஸ்.திடல் வழியாக மூஞ்சிக்கல் பகுதியை அடைந்தது. ... மேலும் பார்க்க

கோயில் திருவிழா ஊா்வலத்தில் பிரச்னை: கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்

வக்கம்பட்டியில் கோயில் திருவிழா மின் ரத ஊா்வலத்தின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்டவா்களைக் கண்டித்து மற்றொரு தரப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் அருகேயுள்ள வக்கம்பட்டியில் ... மேலும் பார்க்க

மஞ்சள் பை விழிப்புணா்வு நிகழ்ச்சி

பழனியில் அரிமா சங்கம் சாா்பில் நெகிழிப் பொருள்களை தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பழனி அரிமா சங்கம் தற்போது வைரவிழா கொண்டாடி வருக... மேலும் பார்க்க