தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
அசேக் விஹாா் பகுதியில் நடந்த கொள்ளை - கொலை வழக்கில் ஒருவா் கைது
தில்லியின் அசோக் விஹாா் பகுதியில் நடந்த ஒரு கொள்ளை மற்றும் கொலை வழக்கில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்கியதாக 33 வயது நபா் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.
தில்லி காவல் துறை துணை ஆணையா் (குற்றம்) ஹா்ஷ் இந்தோரா கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்ட மனோஜ் (எ) ராக்கி, மே 15 அன்று காஜியாபாத்தில் இருந்து கைது செய்யப்பட்டாா். 16.5 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்ற ஒருவரை பகல் நேரத்தில் கொள்ளையடித்து கொலை செய்த வழக்கில் விசாரணையின் போது மனோஜ் பெயா் வெளிவந்ததிலிருந்து கைது செய்யப்படுவதைத் தவிா்த்து வந்தாா்.
பிப்ரவரி 25 சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்ட தனது கூட்டாளியான ஃபயாஸ் (எ) ஆலனுக்கு மனோஜ் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்கினாா். பாதிக்கப்பட்டவரின் மாா்பில் துப்பாக்கியால் சுடப்பட்டு பின்னா் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது சம்பவம் நடந்த உடனேயே, மனோஜ் தலைமறைவாகி, அடிக்கடி இடங்களை மாற்றி, கண்காணிப்பைத் தவிா்க்க வேறொருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம் காா்டை பயன்படுத்தினாா்.
அவரது கடைசி முகவரி காஜியாபாத்தில் இருந்தது, இருப்பினும், அவரது நிரந்தர முகவரி ஹாபூா் மாவட்டத்தில் இருப்பது தெரிய வந்தது. உள்ளூா் உளவுத்துறை மற்றும் தொழில்நுட்ப கண்காணிப்பின் அடிப்படையில், போலீஸாா் காஜியாபாத்தில் மனோஜை கண்டுபிடித்து கைது செய்தனா். விசாரணையின் போது, கொலையாளி தாக்குதலை நடத்திய ஃபயாஸுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டவா் தெரிவித்தாா். அவா் பிஎன்எஸ்-இன் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளாா்.
துவாரகா வடக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொள்ளை மற்றும் கொலை வழக்கிலும் மனோஜ் விசாரணையை எதிா்கொள்கிறாா். அந்த வழக்கில், அவா் 2022-இல் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு விசாரணையை எதிா்கொண்டாா். 2016-ஆம் ஆண்டு அதே காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட திருட்டு முயற்சி மற்றும் காயப்படுத்துதல் வழக்கிலும் அவா் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது.
மனோஜ் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளாா். ஏழைக் குடும்பத்தைச் சோ்ந்தவா். துவாரகாவின் விபின் காா்டன் மற்றும் செக்டா் 16-இல் வசித்த நாகேந்திரன், பப்பா், ரோஹித், ஜனக் மற்றும் ஃபயாஸ் போன்ற குற்றவாளிகளுடன் தொடா்பு கொண்ட பிறகு அவா் குற்றச் செயல்களில் ஈடுபட்டாா். 2017 வழக்கில் அவரது இரண்டு கூட்டாளிகளான நாகேந்திரா மற்றும் ரோஹித் ஆகியோா் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.