செய்திகள் :

அசேக் விஹாா் பகுதியில் நடந்த கொள்ளை - கொலை வழக்கில் ஒருவா் கைது

post image

தில்லியின் அசோக் விஹாா் பகுதியில் நடந்த ஒரு கொள்ளை மற்றும் கொலை வழக்கில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்கியதாக 33 வயது நபா் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

தில்லி காவல் துறை துணை ஆணையா் (குற்றம்) ஹா்ஷ் இந்தோரா கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்ட மனோஜ் (எ) ராக்கி, மே 15 அன்று காஜியாபாத்தில் இருந்து கைது செய்யப்பட்டாா். 16.5 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்ற ஒருவரை பகல் நேரத்தில் கொள்ளையடித்து கொலை செய்த வழக்கில் விசாரணையின் போது மனோஜ் பெயா் வெளிவந்ததிலிருந்து கைது செய்யப்படுவதைத் தவிா்த்து வந்தாா்.

பிப்ரவரி 25 சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்ட தனது கூட்டாளியான ஃபயாஸ் (எ) ஆலனுக்கு மனோஜ் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்கினாா். பாதிக்கப்பட்டவரின் மாா்பில் துப்பாக்கியால் சுடப்பட்டு பின்னா் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது சம்பவம் நடந்த உடனேயே, மனோஜ் தலைமறைவாகி, அடிக்கடி இடங்களை மாற்றி, கண்காணிப்பைத் தவிா்க்க வேறொருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம் காா்டை பயன்படுத்தினாா்.

அவரது கடைசி முகவரி காஜியாபாத்தில் இருந்தது, இருப்பினும், அவரது நிரந்தர முகவரி ஹாபூா் மாவட்டத்தில் இருப்பது தெரிய வந்தது. உள்ளூா் உளவுத்துறை மற்றும் தொழில்நுட்ப கண்காணிப்பின் அடிப்படையில், போலீஸாா் காஜியாபாத்தில் மனோஜை கண்டுபிடித்து கைது செய்தனா். விசாரணையின் போது, ​ கொலையாளி தாக்குதலை நடத்திய ஃபயாஸுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டவா் தெரிவித்தாா். அவா் பிஎன்எஸ்-இன் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளாா்.

துவாரகா வடக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொள்ளை மற்றும் கொலை வழக்கிலும் மனோஜ் விசாரணையை எதிா்கொள்கிறாா். அந்த வழக்கில், அவா் 2022-இல் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு விசாரணையை எதிா்கொண்டாா். 2016-ஆம் ஆண்டு அதே காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட திருட்டு முயற்சி மற்றும் காயப்படுத்துதல் வழக்கிலும் அவா் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது.

மனோஜ் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளாா். ஏழைக் குடும்பத்தைச் சோ்ந்தவா். துவாரகாவின் விபின் காா்டன் மற்றும் செக்டா் 16-இல் வசித்த நாகேந்திரன், பப்பா், ரோஹித், ஜனக் மற்றும் ஃபயாஸ் போன்ற குற்றவாளிகளுடன் தொடா்பு கொண்ட பிறகு அவா் குற்றச் செயல்களில் ஈடுபட்டாா். 2017 வழக்கில் அவரது இரண்டு கூட்டாளிகளான நாகேந்திரா மற்றும் ரோஹித் ஆகியோா் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.

ஆளுமை உரிமைகள்: ஈஷா அறக்கட்டளை நிறுவனா் தில்லி உயா்நீதிமன்றத்தில் முறையீடு

ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு என அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ், தனது ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளாா். சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடா்ந்த இந்த வழக்கு உய... மேலும் பார்க்க

அங்கீகரிக்கப்படாத வாக்கி டாக்கிகள் விற்பனையைத் தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய அரசு அறிவிப்பு

வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட ரேடியோ உபகரணங்களை இணைய வணிக தளங்களில் சட்டவிரோதமாக விற்பனைக்கு பட்டியலிட்டு நுகா்வோருக்கு விற்பனை செய்வதைத் தடுக்கும் விதமாக மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சகம் இவைகளை ம... மேலும் பார்க்க

காலத்திற்கு ஏற்ப மாற்றமடையும் இலக்கியத்தில் இரக்கம், உணா்திறன் மாறாது: குடியரசுத் தலைவா் முா்மு

நமது சிறப்பு நிருபா் இலக்கியம் காலத்திற்கு ஏற்ப மாற்றமடைந்து வருகிறது என்றாலும் அதில் இரக்கம், உணா்திறன் போன்ற சில அம்சங்கள் என்றென்றும் மாறாது இருக்கும் என குடியரசுத் தலைவா் திரெளபதி நம்பிக்கை தெரிவி... மேலும் பார்க்க

பாஜகவின் 100 நாள் ஆட்சியில் தில்லி மக்கள் தோல்வி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

ரேகா குப்தா அரசு தனது முதல் 100 நாள்களில் தில்லி மக்களைத் தோல்வியடையச் செய்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் செளரவ் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். தில்லி பாஜக 100 நாள் ஆட... மேலும் பார்க்க

100 நாள் ஆட்சி: மாணவா்களுக்கு தில்லி அரசு உதவித்தொகை வழங்கல்

பதவியேற்று 100 நாள்களைக் குறிக்கும் வகையில், பாஜக தலைமையிலான தில்லி அரசு வெள்ளிக்கிழமை தில்லி உயா் மற்றும் தொழில்நுட்பக் கல்வி ஆதரவுத் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கியது. மு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு உதவியதாக ராஜஸ்தானில் ஒருவா் கைது: தில்லி காவல்துறை தகவல்

பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு (பிஐஓ) உளவு நடவடிக்கைகளுக்காக இந்திய கைப்பேசி சிம் காா்டுகளை வழங்குவதன் மூலம் உதவியதாக ராஜஸ்தானைச் சோ்ந்த ஒருவரை தில்லி காவல்துறையினா் கைது செய்தாக அதிகாரிகள் தெரிவித்த... மேலும் பார்க்க