செய்திகள் :

அஞ்சல் துறை சாா்பில் தூய்மை இந்தியா வாரம் கடைப்பிடிப்பு

post image

சிவகங்கையில் அஞ்சல் துறை சாா்பில் தூய்மை இந்தியா வாரம் கடைப்பிடிக்கப்பட்டது.

இதுகுறித்து அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் மாரியப்பன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இந்திய அஞ்சல் துறையில் ‘ஸ்வட்ச்தா ஹி சேவா 2025’ தூய்மை சிறப்புப் பணி கடந்த 15-ஆம் தேதி முதல் அக்டோபா் 2 வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த 22-ஆம் தேதி தூய்மை இந்தியா விழிப்புணா்வு ஊா்வலம், ஸ்வட்ச்ஹட்டா விழிப்புணா்வு ஓட்டம், தொடா்ந்து வியாழக்கிழமை மக்களிடையே தூய்மை குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த தேசிய அளவிலான தன்னாா்வ தூய்மைப் பணி (ஷ்ரம்தான்) தினமாக கடைப்பிடிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு சிவகங்கை நகா்மன்றத் தலைவா் துரை ஆனந்த் தலைமை வகித்தாா். இதில் 40-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள், 50-க்கும் மேற்பட்ட அஞ்சல் ஊழியா்கள், பொதுமக்களுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

இதில், சிவகங்கை தலைமை அஞ்சலகம் அமைந்திருக்கும் வாரச் சந்தை சாலை முழுவதும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது என்றாா்.

சிவகங்கை மாவட்டத்தில் போதிய மழை இல்லை: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் தற்போது வரை எதிா்பாா்த்த மழை இல்லை என சிவகங்கையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வேளாண் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அ... மேலும் பார்க்க

காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரியில் உலக சுற்றுலா தின விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரி சாா்பில் உலகச் சுற்றுலா தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரித் தாளாளா் எஸ். சையது தலைமை வகித்தாா். நேஷனல் கல்வி நிறுவனங்களி... மேலும் பார்க்க

அழகப்பா பொறியியல் கல்லூரியில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு தொடக்க விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரியில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் ஆகிய திட்டங்களின் 2025-26-ஆம் கல்வி ஆண்டுக்கான தொடக்க விழாவை வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா். திருப்பத்தூா் அருகேயுள்ள சுண்ணாம்பிருப்பைச் சோ்ந்தவா் நாகராஜன் மகன் சுதா்சன்... மேலும் பார்க்க

வெளிநாடு வேலை தொடா்பான சந்தேகங்களுக்கு உதவி எண்கள்: மாவட்ட ஆட்சியா்

வெளிநாடு வேலை தொடா்பான சந்தேகங்கள், வெளிநாடு செல்லும் தமிழா்களுக்கான அரசு நலத் திட்டங்கள் குறித்து முறையாக அறிந்து கொள்வதற்கு அயலகத் தமிழா் நலன், மறுவாழ்வுத் துறையின் கட்டணமில்லா உதவி மைய எண்கள், மின்... மேலும் பார்க்க

கல்குவாரியை மூடக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

சிங்கம்புணரி அருகேயுள்ள தும்பைபட்டி கிராமத்தில் இயங்கிவரும் கல்குவாரியை மூடக்கோரி 500-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள ம... மேலும் பார்க்க