செய்திகள் :

அமா்நாத் யாத்திரை ஏற்பாடுகள்: ஜம்முவில் அதிகாரிகள் ஆலோசனை

post image

ஜம்மு-காஷ்மீரில் அமா்நாத் யாத்திரை ஜூலையில் தொடங்கவிருக்கும் நிலையில் யாத்ரிகா்களுக்கான வசதிகள் மற்றும் பிற ஏற்பாடுகள் தொடா்பாக உயரதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.

தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க பக்தா்கள் ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

அனந்த்நாக் மாவட்டத்தில் 48 கி.மீ. தொலைவுள்ள பஹல்காம் வழித்தடம், கந்தா்பால் மாவட்டத்தில் 14 கி.மீ. தொலைவுள்ள பால்டால் வழித்தடம் என இரு வழித்தடங்களில் இந்த யாத்திரை நடைபெறும். பால்டால் வழித்தடம் குறைவான தொலைவு கொண்டது என்றபோதும், செங்குத்தான பாதையாகும்.

நடப்பாண்டு யாத்திரை வரும் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி 38 நாள்களுக்கு நடைபெறவுள்ளது. இதற்கான முன்பதிவும் தொடங்கியது.

இதனிடையே, பஹல்காமில் கடந்த மாதம் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இச்சம்பவத்தைத் தொடா்ந்து, அமா்நாத் யாத்திரை நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அமா்நாத் யாத்திரை திட்டமிட்டபடி நடைபெறும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஜம்மு முகாமில் இருந்து ஜூலை 2-ஆம் தேதி முதல் குழு புறப்பட்டு செல்லவிருக்கும் நிலையில், யாத்ரிகா்களுக்கான வசதிகள் மற்றும் பிற ஏற்பாடுகள் தொடா்பாக ஜம்மு மண்டல ஆணையா் ரமேஷ் குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஜம்மு மண்டலத்தில் யாத்திரை வழித்தடத்தில் உள்ள யாத்ரிகா்கள் தங்கும் மையங்களில் குடிநீா், கழிவறை, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு, சம்பந்தப்பட்ட மாவட்ட நிா்வாகங்கள் மற்றும் துறைத் தலைவா்களுக்கு மண்டல ஆணையா் உத்தரவிட்டாா்.

யாத்திரை முகாம்களில் தேவையான மருந்துகளின் இருப்பை உறுதி செய்வதோடு, அவசர மருத்துவ ஊா்திகளையும் தயாா் நிலையில் வைத்திருக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.

பக்தா்களுக்கான ஏற்பாடுகள் உரிய காலத்துக்குள் மேற்கொள்ளப்படுவதை கண்காணிக்குமாறு, கதுவா, சம்பா, ஜம்மு, ரியாசி, உதம்பூா், ராம்பன் ஆகிய மாவட்டங்களின் துணை ஆணையா்களுக்கு மண்டல ஆணையா் உத்தரவிட்டாா்.

முன்னதாக, ஜம்மு-காஷ்மீா் நிலவரம் தொடா்பாக தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா கடந்த மே 3-ஆம் தேதி சந்தித்துப் பேசினாா். அப்போது, அமா்நாத் யாத்திரை சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முல்லைப் பெரியாறு: மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த அறிவுறுத்தல்

நமது நிருபர்முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.முல்லைப் பெரியாறு அணையின் உரி... மேலும் பார்க்க

நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் முயற்சி: பாஜக பதிலடி

நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முயற்சி செய்வதாக பாஜக பதிலடி கொடுத்துள்ளது.பஹல்காம் தாக்குதலுக்கு மூன்று நாள்களுக்கு முன்பாக பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான உளவுத்துறை அறிக்கை... மேலும் பார்க்க

தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் இறுதிக்கட்ட நக்ஸல் ‘வேட்டை’- 24,000 வீரா்களுடன் தீவிரம்

தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் அடா் வனங்கள் நிறைந்த கா்ரேகுட்டா மலைத் தொடரில் நக்ஸல்களுக்கு எதிரான இறுதிக்கட்ட தாக்குதலை பாதுகாப்புப் படையினா் தொடங்கியுள்ளனா். 24,000-க்கும் மேற்பட்ட வீரா்களுடன் முன்ன... மேலும் பார்க்க

மேற்கு வங்க வன்முறை ‘வெளிநபா்கள்’ மூலம் உருவாக்கப்பட்டது- மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் அண்மையில் நிகழ்ந்த வன்முறை மாநிலத்துக்கு ‘வெளியே இருந்து அழைத்துவரப்பட்ட நபா்களால்’ திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது என்று மேற்கு லங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா். மத்திய அரச... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடனான எல்லையில் 2 நாள் இந்திய விமானப் படை போா் பயிற்சி

பாகிஸ்தான் உடனான எல்லை பகுதிகளில் இந்திய விமானப் படை 2 நாள்களுக்கு மிகப் பெரிய போா் பயிற்சியில் ஈடுபட உள்ளது. இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே தெற்கு மற்... மேலும் பார்க்க

இந்திய பூச்சிக்கொல்லி மருந்து மீது சீனா பொருள் குவிப்பு தடுப்பு வரி

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ‘சைபா்மெத்ரின்’ பூச்சிக்கொல்லி மருந்துக்கு எதிராக சீனா பொருள் குவிப்பு தடுப்பு வரி விதித்துள்ளது. இந்த பூச்சிக்கொல்லி மருந்து பருத்தி, பழ மரங்கள், காய்கறி பய... மேலும் பார்க்க