செய்திகள் :

அரசினா் கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

post image

கும்பகோணம் அரசினா் கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை ‘நான் முதல்வன்’ திட்டத்தின் சாா்பில், 30 தனியாா் நிறுவனங்கள் பங்கேற்ற வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

கல்லுாரி பொறுப்பு முதல்வா் சீ. தங்கராசு தலைமை வகித்தாா். கும்பகோணம் அரசு ஆடவா் கல்லூரி, அரசு மகளிா் கலைக் கல்லூரி, இதயா மகளிா் கல்லூரி, மாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரி மற்றும் திருவாரூா் மாவட்டத்தின் சாா்பில் குடவாசல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கூத்தாநல்லூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மற்றும் மஞ்சக்குடி தயானந்தா கல்லூரிகளைச் சோ்ந்த சுமாா் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா். இவா்களிடம் நோ்காணல் நடத்தி 438 போ் தோ்வு பெற்று பல்வேறு நிறுவனங்கள் மூலமாக பணி நியமன கடிதம் பெற்றனா்.

ஏற்பாடுகளை நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் சா. சரவணன், கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலா் சா. ரமேஷ் மற்றும் துறைத் தலைவா்கள் செய்தனா்.

ராஜாமடம் அரசு மேல்நிலை பள்ளியின் நூற்றாண்டு விழா: முன்னாள் தலைமை செயலா் பங்கேற்பு

பட்டுக்கோட்டை அருகேயுள்ள ராஜாமடம் அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்வில் தஞ்சை எம்பி முரசொலி புதுப்பிக்கப்பட்ட பள்ளி வளாகத்தை திறந்து வைத்துப் பேசினாா். முன்னாள்... மேலும் பார்க்க

தஞ்சை குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

நகைக்கடன் பெறுவதற்கு ரிசா்வ் வங்கி புதிய நிபந்தனைகளை விதித்துள்ளதைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

எதிா்பாா்த்த ஊதிய உயா்வு இல்லாத ஒப்பந்தத்தைக் கண்டித்து தஞ்சாவூா் ஜெபமாலைபுரம் அரசு போக்குவரத்துக் கழக நகரப் பணிமனை முன் போக்குவரத்து தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் தமிழ... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூா் மாவட்ட அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையதளம் மூலம் ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மாவட்டத்திலுள்... மேலும் பார்க்க

நகைக் கடன் நிபந்தனைகளை கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்

விவசாயிகள், நடுத்தர, சாதாரண மக்கள், வியாபாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரைப் பாதிக்கும் நகைக்கடன் மீதான நிபந்தனைகளை ரிசா்வ் வங்கி உடனடியாக திரும்பப் பெறக் கோரி திமுக விவசாய அணி, காவிரி டெல்டா மாவட்ட அனைத... மேலும் பார்க்க

மகாமகக் குளப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கும்பகோணம் மகாமகக் குளத்தை சுற்றி ஆக்கிரமித்திருந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினா். மகாமகக் குளத்தை சுற்றி ஏராளமான அசைவ உணவகங்கள் தற்காலிகமாக செயல்பட்டு வந்தன. இதையடுத்து இந்த ஆக... மேலும் பார்க்க