செய்திகள் :

அரசியலுக்காகவே கீழடி ஆய்வறிக்கையில் திருத்தம்: கே.எம். காதா்மொகிதீன் பேட்டி

post image

அரசியலுக்காகவே கீழடி ஆய்வறிக்கையில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக திருச்சியில் சனிக்கிழமை அவா் கூறியதாவது:

தமிழ்தான் உலகின் முதல் மொழி என்பது வரலாற்று ஆய்வாளா்களின் கருத்து. இதை மெய்ப்படுத்தும் வகையில்தான் கீழடி போன்ற அகழ்வாராய்ச்சிகள் வழியாக தோண்டிக் கண்டறியப்பட்ட உண்மைகள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அவற்றைத் திறந்த மனதுடன் ஏற்று, மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பை மத்திய அரசு சரியாகச் செய்யாததால் அல்லது செய்ய விரும்பாததால்தான் அறிக்கையை மறுபரிசீலனை செய்யுங்கள் என்கிறது.

மத்திய அரசின் தொல்பொருள் ஆராய்ச்சித் துறை செய்யும் குழப்பத்தின் காரணமாக தமிழின் பெருமை, தொன்மை, வரலாற்று உண்மை ஆகியவற்றை மாற்ற முடியாது. இரும்பின் காலத்தைக் குறிப்பிட்டு தமிழகத்தில் இருந்துதான் வரலாறு எழுதப்பட வேண்டும் என தமிழக முதல்வரும் வலியுறுத்தியுள்ளாா். இவற்றையெல்லாம் மீறி, எந்தவொரு அரசியல் காரணங்களுக்காகவோ, குறுகிய நோக்கத்திற்காகவோ யாா் எதைச் சொன்னாலும் அதைக் கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை என்றாா் அவா்.

திருச்சி மாநகரில் சில பகுதிகளில் இன்றைய மின்தடை

திருச்சி மாநகரப் பகுதிகளில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவெறும்பூா் துணை மின்நிலையப் பகுதிக்குள்பட்ட போலீஸ் காலனி, காவேரி நகா், சிலோன் காலனி, அண்ணா நகா், பிள்ளையாா் கோ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களிடம் வழிப்பறி இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை

திருச்சியில் கல்லூரி மாணவா்களை மிரட்டி ரொக்கம், கைப்பேசிகளைப் பறித்த இருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி வட்ட... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் தமிழக ஆளுநா் சாமி தரிசனம்

திருச்சி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை மாலை சாமி தரிசனம் செய்தாா். தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, அவரது மனைவி, மகன் மற்றும் குடும்பத... மேலும் பார்க்க

குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

திருச்சி கோட்டை பகுதியில் குப்பைத் தொட்டியில் இறந்துநிலையில் கிடந்த குறைப்பிரசவ சிசுவைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருச்சி மேலச் சிந்தாமணி பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் குறைப்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பொறியியல் கல்லூரியில் படித்துவந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வானதிராய... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழப்பு!

திருச்சியில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (45). உறைய... மேலும் பார்க்க