தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
அரசியலுக்காகவே கீழடி ஆய்வறிக்கையில் திருத்தம்: கே.எம். காதா்மொகிதீன் பேட்டி
அரசியலுக்காகவே கீழடி ஆய்வறிக்கையில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக திருச்சியில் சனிக்கிழமை அவா் கூறியதாவது:
தமிழ்தான் உலகின் முதல் மொழி என்பது வரலாற்று ஆய்வாளா்களின் கருத்து. இதை மெய்ப்படுத்தும் வகையில்தான் கீழடி போன்ற அகழ்வாராய்ச்சிகள் வழியாக தோண்டிக் கண்டறியப்பட்ட உண்மைகள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அவற்றைத் திறந்த மனதுடன் ஏற்று, மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பை மத்திய அரசு சரியாகச் செய்யாததால் அல்லது செய்ய விரும்பாததால்தான் அறிக்கையை மறுபரிசீலனை செய்யுங்கள் என்கிறது.
மத்திய அரசின் தொல்பொருள் ஆராய்ச்சித் துறை செய்யும் குழப்பத்தின் காரணமாக தமிழின் பெருமை, தொன்மை, வரலாற்று உண்மை ஆகியவற்றை மாற்ற முடியாது. இரும்பின் காலத்தைக் குறிப்பிட்டு தமிழகத்தில் இருந்துதான் வரலாறு எழுதப்பட வேண்டும் என தமிழக முதல்வரும் வலியுறுத்தியுள்ளாா். இவற்றையெல்லாம் மீறி, எந்தவொரு அரசியல் காரணங்களுக்காகவோ, குறுகிய நோக்கத்திற்காகவோ யாா் எதைச் சொன்னாலும் அதைக் கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை என்றாா் அவா்.