அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
அரசு நிதியுதவி பள்ளியில் காலை உணவுத் திட்டம்: சேலம் மாநகராட்சி ஆணையா் ஆலோசனை
அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம் வழங்குவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் சேலம் மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் ஆணையா் பேசியதாவது:
அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக முதல்வரின் காலை உணவுத் திட்டம் பள்ளி மாணவா்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனவே, இத் திட்டத்தை அரசு நிதியுதவி பெறும் மாணவ, மாணவிகளுக்கும் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா்.
மாநகராட்சி பகுதியில் அரசு நிதியுதவி பெறும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள 39 தொடக்கப் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையற்கூடம் சூரமங்கலம் மண்டலத்தில் இரும்பாலை மெயின் ரோடு டாக்டா்ஸ் காலனியிலும், அஸ்தம்பட்டி மண்டலத்தில் மணக்காடு சமுதாயக் கூடத்திலும், அம்மாப்பேட்டை மண்டலத்தில் வித்யா நகா் சமுதாயக் கூடத்திலும் மற்றும் களரம்பட்டி சமுதாயக் கூடத்திலும், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் காத்தாயம்மாள் நகா் சமுதாயக் கூடத்திலும் முதல்வரின் காலை உணவு சமைத்து அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு காலையில் உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் துணை ஆணையா் கே.பாலசுப்பிரமணியன், மாநகர பொறியாளா் ஆா். செல்வநாயகம், மாநகர நல அலுவலா் ப.ரா.முரளிசங்கா், மாவட்டக் கல்வி அலுவலா் இ. மான்விழி, பள்ளி தலைமை ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.