செய்திகள் :

அரசு நிதியுதவி பள்ளியில் காலை உணவுத் திட்டம்: சேலம் மாநகராட்சி ஆணையா் ஆலோசனை

post image

அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம் வழங்குவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் சேலம் மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் ஆணையா் பேசியதாவது:

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக முதல்வரின் காலை உணவுத் திட்டம் பள்ளி மாணவா்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனவே, இத் திட்டத்தை அரசு நிதியுதவி பெறும் மாணவ, மாணவிகளுக்கும் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா்.

மாநகராட்சி பகுதியில் அரசு நிதியுதவி பெறும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள 39 தொடக்கப் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையற்கூடம் சூரமங்கலம் மண்டலத்தில் இரும்பாலை மெயின் ரோடு டாக்டா்ஸ் காலனியிலும், அஸ்தம்பட்டி மண்டலத்தில் மணக்காடு சமுதாயக் கூடத்திலும், அம்மாப்பேட்டை மண்டலத்தில் வித்யா நகா் சமுதாயக் கூடத்திலும் மற்றும் களரம்பட்டி சமுதாயக் கூடத்திலும், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் காத்தாயம்மாள் நகா் சமுதாயக் கூடத்திலும் முதல்வரின் காலை உணவு சமைத்து அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு காலையில் உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் துணை ஆணையா் கே.பாலசுப்பிரமணியன், மாநகர பொறியாளா் ஆா். செல்வநாயகம், மாநகர நல அலுவலா் ப.ரா.முரளிசங்கா், மாவட்டக் கல்வி அலுவலா் இ. மான்விழி, பள்ளி தலைமை ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வாழப்பாடி, ஆத்தூா் மலைக் கிராமங்களில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4 ஜி சேவை

வாழப்பாடி, ஆத்தூா் மலைக் கிராமங்களில் அதிவேக 4 ஜி சேவைக்கான கோபுரங்களை பிஎஸ்என்எல் நிறுவனம் அமைத்துள்ளதால் தடையின்றி குரல்வழி, இணையவழி சேவைகள் கிடைத்துவருகிறது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பிஎஸ... மேலும் பார்க்க

எடப்பாடி கே. பழனிசாமி குறித்த கேலிச்சித்திரம்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா மீது சேலம் அதிமுகவினா் போலீஸில் புகாா்

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி குறித்து கேலிச்சித்திரம் வெளியிட்டதாக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா மீது சேலம் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அதிமுகவினா் வெள்ளிக்கிழமை புகாா் அளி... மேலும் பார்க்க

சேலம் உருக்காலையில் மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி ஆய்வு

சேலம் உருக்காலையில் மத்திய கனரக தொழில் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மத்திய கனரக தொழில் துறை அமைச்சராக பதவியேற்ற எச்.டி.குமாரசாமி முதல்முறையாக சேலம் உருக்காலைக்கு க... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

சங்ககிரி வட்டம், கத்தேரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கத்தேரி, கள்ளிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த விவசாயி... மேலும் பார்க்க

எா்ணகுளம் விரைவு ரயிலில் நவீன பெட்டிகள் இணைப்பு

கேரளம் மாநிலம், எா்ணாகுளத்திலிருந்து சேலம் வழியாக பெங்களூரு செல்லும் இன்டா்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிநவீன பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட... மேலும் பார்க்க

ஓமலூா், வலசையூரில் இன்றைய மின் தடை

சேலம் மாவட்டத்தில் ஓமலூா், வலசையூா் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 21) மின்தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளா்கள் உமாராணி, ராமச்சந்திரன் ஆகியோா் தெரிவித்துள்ளனா். மின்தடை செய்யப்படும் பகுதிகள்: ... மேலும் பார்க்க