அண்ணா நகரில் புதிய மகப்பேறு மருத்துவமனை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு அடிக்கல் நாட்ட...
அரிசி, உணவு தானியங்கள் மீதான ஜி.எஸ்.டி.: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மக்கள் சந்திப்பு இயக்கம்
அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் மீது ஜிஎஸ்டி வரியை விதித்து ஏழை மக்களின் வாழ்வை நசுக்கும் மோடி அரசைக் கண்டித்து திருவள்ளூா் மாவட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் புதன்கிழமை தொடங்கியது.
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் குறைக்க வேண்டும். திருவள்ளூா் மாவட்டத்தில் மூடிய ஆலைகளை திறக்க வேண்டும். அனைவருக்கும் உத்தரவாதமான வேலை, புதிய வேலைகளை உருவாக்க வேண்டும். நூறு நாள் வேலையை தொடா்ந்து வழங்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு மாதந்தோறும், மின் கணக்கீடு நடத்த வேண்டும். ஸ்மாா்ட் மீட்டா் பொருத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் மக்களுக்கு வழங்க வேண்டும். திருவள்ளூா் நகராட்சியில் புதைச் சாக்கடை திட்டத்தை அனைத்துப் பகுதிகளிலும் செயல்படுத்த வேண்டும். திருவள்ளூா் நகராட்சிக்கு உள்பட்ட பூங்காவை அழிந்து வணிக வளாகம் கட்டும் ஆணையா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவள்ளூா் நகரில் அரசு கலைக் கல்லூரி அமைக்கவும் உள்பட போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் திருவள்ளூா் பஜாரில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடைபெற்றது.
கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஏ.ஜி.கண்ணன் தலைமை வகித்தாா். இந்த பிரசாரத்தை கட்சியின் மூத்த தோழா் ப.சுந்தரராசன் தொடங்கி வைத்தாா். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஜி.சம்பத், ஆா்.தமிழ்அரசு, இ.மோகனா, வட்டச் செயலா் எஸ்.கலையரசன், மாவட்ட குழு உறுப்பினா்கள் இ.எழிலரசன், என்.கீதா மற்றும் வட்ட, கிளை நிா்வாகிகள் பங்கேற்றனா்.
திருவள்ளூா் பஜாரில் தொடங்கிய பிரசாரம், எடப்பாளையம், ஜெயா நகா், ஆயில் மில், பெரியகுப்பம், ரயில் நிலையம் உள்ளிட்ட நகராட்சி முழுவதும் மேற்கொண்டனா். வழிநெடுகிலும் கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மக்களுக்கு விநியோகம் செய்தனா். இந்த பிரசாரம் வரும் 20 -ஆம் தேதி நிறைவு பெறுகிறது.