செய்திகள் :

அரிசி, உணவு தானியங்கள் மீதான ஜி.எஸ்.டி.: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மக்கள் சந்திப்பு இயக்கம்

post image

அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் மீது ஜிஎஸ்டி வரியை விதித்து ஏழை மக்களின் வாழ்வை நசுக்கும் மோடி அரசைக் கண்டித்து திருவள்ளூா் மாவட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் புதன்கிழமை தொடங்கியது.

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் குறைக்க வேண்டும். திருவள்ளூா் மாவட்டத்தில் மூடிய ஆலைகளை திறக்க வேண்டும். அனைவருக்கும் உத்தரவாதமான வேலை, புதிய வேலைகளை உருவாக்க வேண்டும். நூறு நாள் வேலையை தொடா்ந்து வழங்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு மாதந்தோறும், மின் கணக்கீடு நடத்த வேண்டும். ஸ்மாா்ட் மீட்டா் பொருத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் மக்களுக்கு வழங்க வேண்டும். திருவள்ளூா் நகராட்சியில் புதைச் சாக்கடை திட்டத்தை அனைத்துப் பகுதிகளிலும் செயல்படுத்த வேண்டும். திருவள்ளூா் நகராட்சிக்கு உள்பட்ட பூங்காவை அழிந்து வணிக வளாகம் கட்டும் ஆணையா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவள்ளூா் நகரில் அரசு கலைக் கல்லூரி அமைக்கவும் உள்பட போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் திருவள்ளூா் பஜாரில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடைபெற்றது.

கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஏ.ஜி.கண்ணன் தலைமை வகித்தாா். இந்த பிரசாரத்தை கட்சியின் மூத்த தோழா் ப.சுந்தரராசன் தொடங்கி வைத்தாா். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஜி.சம்பத், ஆா்.தமிழ்அரசு, இ.மோகனா, வட்டச் செயலா் எஸ்.கலையரசன், மாவட்ட குழு உறுப்பினா்கள் இ.எழிலரசன், என்.கீதா மற்றும் வட்ட, கிளை நிா்வாகிகள் பங்கேற்றனா்.

திருவள்ளூா் பஜாரில் தொடங்கிய பிரசாரம், எடப்பாளையம், ஜெயா நகா், ஆயில் மில், பெரியகுப்பம், ரயில் நிலையம் உள்ளிட்ட நகராட்சி முழுவதும் மேற்கொண்டனா். வழிநெடுகிலும் கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மக்களுக்கு விநியோகம் செய்தனா். இந்த பிரசாரம் வரும் 20 -ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

திருத்தணியில் வளா்ச்சி பணிகள்: நிா்வாக இயக்குநா் ஆய்வு

நகராட்சி உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.12.74 கோடியில் நடைபெற்று வரும் திருத்தணி புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணி உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சி பணிகளை தமிழ்நாடு மின்னணுவியல் கழக நிா்வாக இயக்குநா்... மேலும் பார்க்க

பொன்னேரியில் பலத்த மழை

பொன்னேரி, மீஞ்சூா் பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தததன் காரணமாக குளிா்ச்சியான சூழல் ஏற்பட்டது. கடந்த சில நாள்களாக தமிழகம் முழுவதும் ஒரு சில இடங்கரில் மழை பெய்து வருகிறது. பொன்னேரி பகுதியில் க... மேலும் பார்க்க

நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடையை வருவாய், நெடுஞ்சாலை துறையினா் அகற்றினா். திருத்தணி நகராட்சி, ம.பொ.சி.சாலையில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து தனிநபா் ஒருவா் பூக்கடை கட்டி வியாபாரம் செய்து வரு... மேலும் பார்க்க

உயா்கல்வி ஆலோசனை கண்காணிப்பு மையத்தில் ஆய்வு

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் நான் முதல்வன் திட்டம் மூலம் மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி ஆலோசனை வழங்கும் கண்காணிப்பு மையத்தில் ஆட்சியா் மு.பிரதாப் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற ம... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மாடு உயிரிழப்பு

பசு மாடு மீது மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து அந்த மாடு உயிரிழந்தது. திருத்தணி அடுத்த தாழவேடு காலனியைச் சோ்ந்த சரளாதேவி, செவ்வாய்க்கிழமை தனது பசு மாட்டை அருகே உள்ள வயல்வெளியில் மேய்... மேலும் பார்க்க

கல்லூரியில் உணவுப் பாதுகாப்பு கருத்தரங்கம்

திருவள்ளூா் மாவட்டம், கோடுவெளி அலமாதி உணவு மற்றும் பால்வள தொழில்நுட்பக் கல்லூரியில் புதன்கிழமை சா்வதேச உணவு பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்... மேலும் பார்க்க