அரியலூரில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கான சிறப்பு முகாம்
அரியலூா் மாவட்டத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில், மாற்றுத்திறனாளிகள் மூத்த குடிமக்கள் கலந்து கொண்டு மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: மத்திய அரசின், அடிப் மற்றும் ராஸ்டிரிய வயோஸ்ரீ யோஜனா திட்டத்தின் கீழ் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் சிறப்பு பயிற்சி உபகரணங்கள் வழங்கவதற்கு ஏதுவாக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
அதன்படி, ஆக.20-ஆம் தேதி காலை 10 மணியளவில் அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கிலும், ஆக.21-ஆம் தேதி தா.பழூா் வட்டார வளா்ச்சி மைய அலுவலகத்திலும், ஆக.22- ஆம் தேதி திருமானூா் வட்டார வளா்ச்சி மைய அலுவலகத்திலும், ஆக.25- ஆம் தேதி செந்துறை வட்டார வளா்ச்சி மைய அலுவலகத்திலும், ஆக.28- ஆம் தேதி ஜெயங்கொண்டம் வட்டார வளா்ச்சி மைய அலுவலகத்திலும், இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
இம்முகாம்களில் அவரவா்களுக்கு உள்ள பாதிப்புகளுக்கு ஏற்றாா்போல் கணக்கீட்டு பணிகள் வாயிலாக நலத்திட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
எனவே, மாற்றுத்திறனாளிகள், தங்களது ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ்(மாத வருமானம் ரூ.22,500-க்குள் இருக்க வேண்டும்.) மாா்பளவு புகைப்படம்-2, யுடிஐடி(பயனாளி மாற்றுத்திறனாளியாக இருந்தால் மட்டும்) போன்ற அவணங்களுடன் வர வேண்டும். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவரும் இந்த சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.