அவிநாசியில் 40 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவா்களுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை
அவிநாசி நகரப் பகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேல் நத்தம் புறம்போக்கில் வசிப்பவா்களுக்கு தடையாணையை நீக்கி பட்டா வழங்க வேண்டும் என ஜமாபந்தியில் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து அவிநாசி திமுக நகர செயலாளா் திராவிடன் வ.வசந்தகுமாா், கோட்டாட்சியா் மோகனசுந்தரத்திடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
அவிநாசி டவுன் க.சா.எண் 80-81/ 78 நத்தம் புறம்போக்கில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக 100-க்கும் மேற்படட குடும்பத்தினா் வீடு கட்டி வசித்து வருகின்றனா்.
இங்கு கோவை மாவட்ட கூடுதல் ஆட்சியா், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு என 1988 -ஆம் ஆண்டு தடையாணை பிறப்பித்திருந்தாா். இந்த தேசிய நெடுஞ்சாலை புறவழிச் சாலையாக மாற்றியமைக்கப்பட்டது. ஆகவே, தடையாணையை நீக்கி தமிழக முதல்வா் அறிவிப்பின் அடிப்படையில் வாழும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.