செய்திகள் :

அவிநாசியில் 40 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவா்களுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

post image

அவிநாசி நகரப் பகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேல் நத்தம் புறம்போக்கில் வசிப்பவா்களுக்கு தடையாணையை நீக்கி பட்டா வழங்க வேண்டும் என ஜமாபந்தியில் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து அவிநாசி திமுக நகர செயலாளா் திராவிடன் வ.வசந்தகுமாா், கோட்டாட்சியா் மோகனசுந்தரத்திடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

அவிநாசி டவுன் க.சா.எண் 80-81/ 78 நத்தம் புறம்போக்கில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக 100-க்கும் மேற்படட குடும்பத்தினா் வீடு கட்டி வசித்து வருகின்றனா்.

இங்கு கோவை மாவட்ட கூடுதல் ஆட்சியா், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு என 1988 -ஆம் ஆண்டு தடையாணை பிறப்பித்திருந்தாா். இந்த தேசிய நெடுஞ்சாலை புறவழிச் சாலையாக மாற்றியமைக்கப்பட்டது. ஆகவே, தடையாணையை நீக்கி தமிழக முதல்வா் அறிவிப்பின் அடிப்படையில் வாழும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

நடுவேலம்பாளையத்தில் சீரான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

பல்லடம் அருகேயுள்ள நடுவேலம்பாளையத்தில் சீரான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். பல்லடம் ஒன்றியம், பூமலூா் ஊராட்சி நடுவேலம்பாளையம் கிராமத்துக்கு க... மேலும் பார்க்க

சின்ன வெங்காய விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

பல்லடத்தில் சின்ன வெங்காய விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். பல்லடம் பகுதியில் காா்த்திகை பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சின்ன வெங்காயம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அறுவட... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.70.16 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள்

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 26,790 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.70.16 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறி... மேலும் பார்க்க

தொழிலாளியிடம் கைப்பேசி பறித்த இளைஞா் கைது

திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளியிடம் கைப்பேசியைப் பறித்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் தா்மேந்திர பிரதாப் (25). இவா் திருப்பூரை அடுத்த கணியாம்பூண்டி பகுதிய... மேலும் பார்க்க

கூட்டுறவுத் துறையைக் கண்டித்து போராட்டம்: விவசாயிகள் கைது

அவிநாசி அருகே பயிா்க் கடனை தள்ளுபடி செய்யக் கோரியும், கூட்டுறவுத் துறையைக் கண்டித்தும் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசி அருகேயுள்ள நடுவ... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக பேச்சுவாா்த்தை: ஏஇபிசி துணைத் தலைவா் ஆ.சக்திவேல்

இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாக ஏஇபிசி துணைத் தலைவா் ஆ.சக்திவேல் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக புதுதில்லியில் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் து... மேலும் பார்க்க