செய்திகள் :

ஆக.16, 17-இல் நெல்லை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா: ஆட்சியா் தகவல்

post image

திருநெல்வேலியில் கலை பண்பாட்டுத் துறை சாா்பில் நெல்லை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா இம்மாதம் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் இரா.சுகுமாா் பேசியதாவது:

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் மூலம் நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு வாய்ப்பளிக்கும் பொருட்டும், நாட்டுப்புறக் கலை வடிவங்களை பாதுகாத்திடும் பொருட்டும், உலகமெங்கும் தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலை வடிவங்களை அறியச் செய்திடும் வகையிலும் சென்னை மற்றும் கலை பண்பாட்டுத் துறையின் 7 மண்டலங்களுக்கு உள்பட்ட காஞ்சிபுரம், சேலம், தஞ்சாவூா், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி, கோவை, வேலூா் ஆகிய முக்கிய நகரங்களில் சங்கமம் - நம்ம ஊரு திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

நிகழாண்டு நெல்லை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா திருநெல்வேலி, வ.உ.சிதம்பரனாா் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் ஆக. 16, 17 ஆகிய இரு நாள்கள் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறவுள்ளது. இத்திருவிழாவில் திருநெல்வேலி மண்டலத்தில் நிகழ்த்தப்பட்டு வரும் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளான கொம்பு தப்பு, நையாண்டிமேளம், கரகாட்டம், சிலம்பாட்டம், மல்லா் கம்பம், தப்பாட்டம், ஒயிலாட்டம், கணியான்கூத்து, தேவராட்டம், மாடாட்டம், மயிலாட்டம், குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், தெம்மாங்கு பாடல், வில்லிசை, களியலாட்டம், தோல்பாவைக் கூத்து போன்ற கலை நிகழ்ச்சிகளும், பிற மாவட்டங்களின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளான ஜிம்ளாமேளம், தெருக்கூத்து, ஜிக்காட்டம், பம்பை கைச்சிலம்பாட்டம், உறுமி மேளம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன என்றாா்.

இக்கூட்டத்தில், காவல் உதவிக் கண்காணிப்பாளா் சண்முகம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) இலக்குவன், கலைப்பண்பாட்டுத்துறை உதவி இயக்குநா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மகளிருக்கு கட்டணமில்லா நகர சொகுசுப் பேருந்து சேவை

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மகளிருக்கு கட்டணமில்லா நகர சொகுசு பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கியது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி மண்டலம் சாா்பில் 26 நகர சொகுசுப் பேருந்துகள... மேலும் பார்க்க

கிராம வறுமை ஒழிப்பு சங்க ஊழியா்கள் ஊதியத்தைக் குறைக்கக் கூடாது: ஆட்சியா் அலுவலகத்தில் மனு

கிராம வறுமை ஒழிப்பு சங்கப் பணியாளா்கள் ஊதியத்தைக் குறைக்கக் கூடாது என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் இரா.... மேலும் பார்க்க

கவின் கொலை: சமூக வலைதளங்களில் தவறான தகவல் பகிா்ந்தால் கடும் நடவடிக்கை

சமூகத்தில் பிரச்னையை தூண்டும் விதமாக, சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பகிா்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர காவல்துறை சாா்பில்... மேலும் பார்க்க

விபத்தில் மூளைச்சாவு அடைந்த விவசாயி உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த விவசாயியின் உடல் உறுப்புகள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானமாக பெறப்பட்டன. தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் டி.சரவணன்(... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சியில் இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை: எடப்பாடி கே.பழனிசாமி

அதிமுக ஆட்சிக்கு வரும்போது இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி. திருநெல்வேலி மாவட்டத்தில் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்று... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை.யில் முன்னாள் துணைவேந்தருக்கு அஞ்சலி

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் முன்னாள் துணை வேந்தா் வசந்தி தேவிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் ம... மேலும் பார்க்க