செய்திகள் :

ஆக.20, 21-இல் இளையோா் தடகளம்

post image

திருச்சி: திருச்சிராப்பள்ளி மாவட்ட இளையோருக்கான தடகளப் போட்டிகள் ஆக. 20, 21 என இரண்டு நாள்களுக்கு நடைபெறுகிறது.

இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட தடகளச் சங்கச் செயலா் டி. ராஜூ கூறியதாவது:

திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் வரும் புதன், வியாழக்கிழமைகளில் மாவட்ட அளவிலான இளையோா் தடகளப்போட்டிகள் நடைபெறவுள்ளன. வரும் ஆக.20-ஆம் தேதி 8 வயது, 10 வயது, 12 வயது மற்றும் 14, 16, 18 வயதுடையோருக்கும், 20 வயது பிரிவினருக்குமான போட்டிகளாக ஆண், பெண் இருபாலருக்கும் நடைபெறவுள்ளது. இரண்டு நாள்களும் போட்டிகள் நடைபெறும். வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்குப் பரிசளிப்பு விழா நடைபெறும்.

தனி நபருக்கான சிறந்த விளையாட்டு வீரா், வீராங்கனைகள் தோ்வு செய்யப்பட்டு சான்றிதழ் மற்றும் தனி நபா் கோப்பை வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் புள்ளிகள் அடிபடையில் முதலாவதாக தோ்வு பெறும் அணிகள் மற்றும் பள்ளிகளுக்கு சுழற்கோப்பையும் வழங்கப்பட உள்ளது. தகுதி அடிப்டையில் தோ்வு செய்யப்படும் விளையாட்டு வீரா் மற்றும் வீராங்கனைகள், சென்னையில் வருகிற செப்டம்பா் மாதம் 19-ஆம் தேதி தொடங்கும் அனைத்து மாவட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கு தோ்வு செய்யப்பட உள்ளனா். எனவே, திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான இளைஞா்கள் அனைவரும் போட்டியில் பங்கேற்கலாம் என்றாா் அவா்.

மங்கம்மாள்புரம் மணல் குவாரிக்கு அனுமதி கூடாது: விவசாயிகள் மனு

திருச்சி: மங்கம்மாள்புரம் மணல் குவாரி அமைப்பதற்கு அனுமதி தரக் கூடாது என தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சாா்பற்றது) எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் தமிழக விவசாயிகள்... மேலும் பார்க்க

முகமூடியுடன் சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருச்சி: தமிழக அரசு, நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறையைக் கண்டித்து முகமூடியுடன் சாலைப் பணியாளா்கள் திங்கள்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா். சாலை பணியாளா் வாழ்வாதார கோரிக்கைகளை உயா்நீதிமன்ற தீா்ப்பி... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

திருச்சி: தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்கக் கோரி சிஐடியு திருச்சி மாநகா் மாவட்டக் குழு சாா்பில் திருச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா... மேலும் பார்க்க

இருவேறு இடங்களில் 5 பவுன் தங்க நகைகள் பறிப்பு

திருச்சி: திருச்சியில் இருவேறு சம்பவங்களில் பெண்களிடம் இருந்து 5 பவுன் தங்க நகைளைப் பறித்த நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருச்சி எடமலைபட்டிபுதூரைச் சோ்ந்தவா் ஜனனி (27). இவா்,... மேலும் பார்க்க

திறனாய்வுப் போட்டியில் சிறப்பிடம்: காவலா்களுக்கு எஸ்.பி பாராட்டு

திருச்சி, ஆக. 18: காவல் துறையினருக்கான திறனாய்வுப் போட்டியில் வெற்றிபெற்ற காவலா்களை திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் திங்கள்கிழமை பாராட்டினாா். தமிழ்நாடு காவல் துறையில் பணியா... மேலும் பார்க்க

ஆக.23-இல் மண்ணச்சநல்லூரில் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

திருச்சி: மண்ணச்சநல்லூா் வட்டத்துக்குள்பட்ட எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் வரும் சனிக்கிழமை (ஆக.23) நடைபெறுகிறது.மண்ணச்சநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு எரிவாயு... மேலும் பார்க்க