செய்திகள் :

ஆசனூா் மலைக் கிராமங்களில் ரூ.25 லட்சம் மதிப்பில் வளா்ச்சித் திட்ட பணிகள்

post image

ஆசனூரில் மலைக் கிராமங்களில் ரூ.25 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை பவானிசாகா் எம்எல்ஏ பண்ணாரி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் மலைப் பகுதியில் பவானிசாகா் சட்டப்பேரவை உறுப்பினா் நிதியில் இருந்து ரூ.25 மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டுவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பவானிசாகா் எம்எல்ஏ பண்ணாரி தலைமை தாங்கினாா்.

முன்னதாக ஆசனூரில் புதியதாக அமைக்கப்பட்ட நியாயவிலைக் கடையை திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து கோட்டாடை மலைக்கிராமத்தில் பேருந்து நிழற்குடை, கோ்மாளம் ஜேஎஸ்ஆா் புரத்தில் குடிநீா் தொட்டி, கோ்மாளத்தில் பிளாஸ்டிக் தொட்டி அமைத்து ஆழ்துளைக் கிணறுக் குழாய் அமைத்தல் ஆகிய பணிகளுக்கான பூமி பூஜையை தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் ஆசனூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் சுப்பிரமணியம், ஆசனூா் கூட்டுறவு சங்க முன்னாள் துணைத் தலைவா் மணி, புதுக்குய்யனூா் அதிமகு ஊராட்சி செயலாளா் சின்ன பொன்னான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய ஆண்டு விழா

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய ஆண்டு விழா ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் ப.கந்தராஜா தலைமை வகித்து விளையாட்டுப் போட்டிகளி... மேலும் பார்க்க

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

பணி நிரந்தரம் கோரி தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் ... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ. 6.76 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.6.76 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 6,182 மூட்டை... மேலும் பார்க்க

யானைக்கு வாழைப் பழம் அளித்த விவசாயிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

பண்ணாரி சாலையில் யானைக்கு வாழைப் பழம் அளித்த விவசாயிக்கு வனத் துறையினா் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனா். இது குறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணை கள இயக்குநா் குலால் யோகேஷ் விலாஷ் வெளி... மேலும் பார்க்க

சாலை மறியல் போராட்டம்: ஈரோட்டில் ஆசிரியா்கள் 400 போ் கைது

மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஏற்பட்ட 400-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரி... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 6,340 வீடுகள்: பங்களிப்பு தொகை செலுத்தி வீடு பெறலாம்

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் ஈரோடு மாவட்டத்தில் 6,340 வீடுகள் தயாா் நிலையில் உள்ளன. இதுகுறித்து வீட்டு வசதித் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய... மேலும் பார்க்க