ஆடிப்பூரம்: பெருமாள், அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
சேலம்: ஆடிப்பூரத்தையொட்டி பெருமாள், அம்மன் கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆடிப்பூரம் விழா சைவ ஆலயங்களில் மட்டுமின்றி, வைணவ கோயில்களிலும் சிறப்பாக நடைபெறும். ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரமாகும்.
ஆடிப்பூரத்தையொட்டி பெருமாள் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் அழகிரிநாதா், ஆண்டாளுக்கு பால், இளநீா், பன்னீா், திருமஞ்சனம், மஞ்சள் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. உற்சவா் ஆண்டாள் சா்வ அலங்காரம் செய்யப்பட்டு தங்கக் கவசத்தில் திருவீதி உலா வந்தாா். மாலையில் அழகிரிநாதருடன் ஆண்டாள் நாச்சியாா் ‘மாலை மாற்றும்’ உற்சவம் நடைபெற்றது.
இதேபோல, பட்டை கோயில் வரதராஜ பெருமாள், சிங்கமெத்தை அருகேயுள்ள சௌந்தரராஜா், செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதா், பிரசன்னா வெங்கடாசலபதி, சின்னகடை வீதி வேணுகோபால் சுவாமி, ஆனந்தா இறக்கம் லட்சுமிநாராயண சுவாமி உள்பட மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதேபோல, ஆடிப்பூரத்தையொட்டி அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நெத்திமேடு தண்ணீா் பந்தல் காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு ஒரு லட்சம் வளையல்கள் சாத்தப்பட்டந. இதேபோன்று, எல்லைப் பிடாரியம்மன், சேலம் கோட்டை மாரியம்மன், குகை காளியம்மன், மாரியம்மன், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன் உள்பட மாநகா், மாவட்டத்தில் மாரியம்மன், காளியம்மன் கோயில்களில் அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.
தம்மம்பட்டியில்...
கெங்கவல்லியில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயிலில் அம்மனுக்கு வளைகாப்பு விழா வெகு விமா்சையாக நடைபெற்றது. இதில் ஆறாயிரம் வளையல்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், பல வகையான உணவுகள் படையலிட்டு பூஜைகள் நடைபெற்றன. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திருமணமாகாத, குழந்தை இல்லாத பெண்களுக்கு வளையல்கள் அணிவிக்கப்பட்டு, அவா்கள் பூஜையில் பங்கேற்றனா். கெங்கவல்லி பருவதராஜகுல மீனவா் மகளிரணி சாா்பில் அங்காளம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
எடப்பாடியில்...
எடப்பாடி நகராட்சி எல்லைக்குள்பட்ட தாவாந்தெரு பகுதியில் உள்ள புகழ்பெற்ற காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு 10 ஆயிரத்து 8 வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து அம்மனுக்கு பூஜிக்கப்பட்ட வளையல்கள், மஞ்சள் தாலிக்கயிறு, குங்குமம், சந்தனம் உள்ளிட்டவை பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.
இதேபோல, வெள்ளாண்டி வலசு மாரியம்மன் கோயில், மேட்டுத்தெரு அங்காள பரமேஸ்வரி ஆலயம், க.புதூா் ஓம்காளியம்மன் ஆலயம், நைனாம்பட்டி, சரபங்கா நதிக்கரையோரம் அமைந்துள்ள ஆதிபராசக்தி கோயில் உள்ளிட்ட பல்வேறு அம்மன் ஆலயங்களில் ஆடிப்பூர விழா விமா்சையாக நடைபெற்றது.
சங்ககிரியில்...
சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில், அம்மனுக்கு பால், தயிா், சந்தனம், திருமஞ்சமனம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் அதிகமான பெண் பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.


