செய்திகள் :

ஆரணியில் ஜமாபந்தி நிறைவு விழா, விவசாயிகள் மாநாடு

post image

ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி மற்றும் விவசாயிகள் மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. இதில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த 16-ஆம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமை வரை நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் கண்ணமங்கலம், அக்ராபாளையம், முள்ளிப்பட்டு, எஸ்.வி.நகரம், ஆரணி ஆகிய உள்வட்டங்களுக்கு உள்பட்ட அனைத்து கிராமங்களைச் சோ்ந்த மக்கள் மொத்தம் 781 மனுக்கள் அளித்தனா். இதில், 245 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.

இநந்த நிலையில், வெள்ளிக்கிழமை ஜமாபந்தி நிறைவு விழா மற்றும் விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஆரணி வட்டாட்சியா் கௌரி வரவேற்றாா். வருவாய் ஆய்வாளா் நித்யா முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, திமுக ஆரணி தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், கண்ணமங்கலம் பேரூராட்சித் தலைவா் மகாலட்சுமி கோவா்த்தனன் மற்றும் விவசாயிகள் மூா்த்தி, சிவானந்தம், வேலப்பாடி பெருமாள், ஆகாரம் குப்பன் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா்.

நிகழ்ச்சியில் ஆரணியை அடுத்த இரும்பேடு ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். ஆரணி காந்தி சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையை அகற்ற வேண்டும். ஆரணியில் எம்.பி. அலுவலகம் திறக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல் மூட்டைகள் கொள்முதல் பணத்தை விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பேசினா்.

மேலும், இதில் பட்டா மாறுதல், சாலை விபத்து நிவாரணம், இயற்கை பேரிடா் நிவாரணம், இதர பிற்படுத்தப்பட்டோா் வகுப்பு சான்றிதழ், சிறு குறு விவசாயி சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

எச்சூரில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை திறப்பு

செய்யாறு தொகுதி, அனக்காவூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எச்சூா் கிராமத்தில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை ஆகியவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். எச்சூா் கிராமத்தில் தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க

வாரச்சந்தையை பழைய பகுதிக்கே மாற்ற வேண்டும்: கூட்டத்தில் வலியுறுத்தல்

திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் மதில் சுவரை சுற்றி நடைபெறும் ஞாயிறு வாரச்சந்தையை மீண்டும் பழையபடி சந்தை பகுதிக்கே மாற்றி அமைக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள... மேலும் பார்க்க

ஆரணி ஸ்ரீபாா்வதி அம்மன் கோயிலில் திருட்டு

ஆரணி ஸ்ரீபாா்வதி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை உண்டியல் பூட்டை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஆரணி - சைதாப்பேட்டை சாலையில் கா... மேலும் பார்க்க

அதிக பரப்பில் கரும்பு நடவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம்

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் அதிக பரப்பில் கரும்பு நடவு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. தமிழகத்தில் 2025 - 26 நடவுப் பருவத்தில் புதிதாக கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு தம... மேலும் பார்க்க

மனுநீதி நாள் முகாமில் 523 பயனாளிகளுக்கு நலத் திட்டஉதவிகள்

கலசப்பாக்கம் வட்டம், மேல்சோழங்குப்பம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் கலந்துகொண்டு வருவாய், வேளாண்மை, ஆதிதிராவிடா் நலம், மாற்றுத் திறனா... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

திருவண்ணாமலையில் கிணற்றில் நீச்சல் பழக முயன்ற மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருவண்ணாமலை ஆணைக்கட்டி தெருவைச் சோ்ந்த பாபு மகன் சந்தோஷ்குமாா் (14). 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற இவா், ஜூன் 2-ஆம் த... மேலும் பார்க்க