பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
ஆறுமுத்தாம்பாளையத்தில் பெண்ணிடம் 5 பவுன் பறித்த இளைஞா் கைது
பல்லடம் அருகேயுள்ள ஆறுமுத்தாம்பாளையத்தில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறித்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் மனைவி மதுபிரியா (30). சம்பவத்தன்று இவா் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியே வந்த இளைஞா் ஒருவா் முகவரி கேட்பதுபோல நடித்து அவா் அணிந்திருந்த 5 பவுன் தங்கத் தாலி கொடியைக் கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துச் சென்றாா். இது குறித்து பல்லடம் போலீஸில் மதுபிரியா புகாா் அளித்தாா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
இதற்கிடையே, பல்லடத்தில் போலீஸாா் வாகன சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியே சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.
விசாரணையில், அவா் தூத்துக்குடியைச் சோ்ந்த சிவசக்தி (27) என்பதும், முகவரி கேட்பதுபோல நடித்து மதுபிரியாவிடம் நகையைப் பறித்துச் சென்றவா் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து அவரிடம் இருந்து 5 பவுன் தங்க நகையைப் பறிமுதல் செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.