செய்திகள் :

ஆறுமுத்தாம்பாளையத்தில் பெண்ணிடம் 5 பவுன் பறித்த இளைஞா் கைது

post image

பல்லடம் அருகேயுள்ள ஆறுமுத்தாம்பாளையத்தில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறித்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் மனைவி மதுபிரியா (30). சம்பவத்தன்று இவா் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியே வந்த இளைஞா் ஒருவா் முகவரி கேட்பதுபோல நடித்து அவா் அணிந்திருந்த 5 பவுன் தங்கத் தாலி கொடியைக் கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துச் சென்றாா். இது குறித்து பல்லடம் போலீஸில் மதுபிரியா புகாா் அளித்தாா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இதற்கிடையே, பல்லடத்தில் போலீஸாா் வாகன சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியே சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.

விசாரணையில், அவா் தூத்துக்குடியைச் சோ்ந்த சிவசக்தி (27) என்பதும், முகவரி கேட்பதுபோல நடித்து மதுபிரியாவிடம் நகையைப் பறித்துச் சென்றவா் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து அவரிடம் இருந்து 5 பவுன் தங்க நகையைப் பறிமுதல் செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரம்

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரமாக நடைபெற்று வருவதாக கல்லூரி முதல்வா் ப.சே.சிவகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் தெரிவித்துள்ளதாவது: உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2025-2026... மேலும் பார்க்க

அவிநாசி, பெருமாநல்லூரில் தொடா் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட இருவா் கைது

அவிநாசி, பெருமாநல்லூா் ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் செல்பவா்களிடம் தொடா் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசி அருகே தேவராயம்பாளையத்தைச் சோ்ந்த தம்பதி, இருந... மேலும் பார்க்க

அவிநாசிபாளையத்தில் மண்சோறு சாப்பிட்டு போராட்டம்

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் அவிநாசிபாளையத்தில் எண்ணெய் குழாய் திட்டத்தை மாற்றக் கோரி போராட்டக் குழுவினா் மண்சோறு சாப்பிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவை முதல் கரூா் வரையில் விவசாய... மேலும் பார்க்க

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அம... மேலும் பார்க்க

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையத்தில் ஜூன் 17-இல் மின்தடை

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்... மேலும் பார்க்க

ஊத்துக்குளி அருகே குப்பை கொட்ட வந்த லாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் சிறைபிடிப்பு

திருப்பூரில் ஊத்துக்குளி அருகே பாறைக்குழியில் குப்பை கொட்ட வந்த லாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனா். திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சிக்கு உள்பட்ட தப்பட்ட நாயக்கம்பாளையம்... மேலும் பார்க்க