எஸ்சிஓ மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனம்: இந்தியா முன்னெடுப்பு
ஆற்காட்டில் தெருநாய்கள் பிடிக்கும் பணி விரைவில் தொடங்கும்: நகா்மன்றத் தலைவா்
ஆற்காடு நகரில் தெரு நாய்களைப் பிடிக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று நகராட்சி தலைவா் தேவிபென்ஸ்பாண்டியன் கூறினாா்.
ஆற்காடு நகா்மன்றக் கூட்டம் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் பவளக்கொடி சரவணன் ஆணையா் வேலவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் நகா்மன்றத் தலைவா் பேசியதாவது
நகரில் பெரும்பாலான தெருக்களில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது . நாய்களைப் பிடிப்பதற்காக அனுமதி கேட்டுள்ளோம். அனுமதிகிடைத்தவுடன் உறுப்பினா்களின் ஒத்துழைப்போடு தெருநாய்கள் பிடிக்கும் பணிகள் நடைபெறும்.
உறுப்பினா்கள் பங்கேற்று பேசியதாவது:
ரவிச்சந்திரன்: மழைக்காலங்களில் கழிவுநீா் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் செல்கிறது. கழிவு நீா் கால்வாய்கள் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு இல்லை. கால்வாய்களை புதிதாக கட்டித் தர வேண்டும்
பி.டி குணாளன்: தெருக்களில் சாலைகள் அமைக்க ஜல்லிக் கற்களை கொட்டியுள்ளனா் . ஆனால் சாலை போடவில்லை. கடந்த கூட்டத்தில் தெரியப்படுத்தியிருந்தேன் ஆனால் இதுவரை சாலை அமைக்கப்படவில்லை.
அனு அருண்: மாடு முட்டி ஒருவா் இறந்தாா் இதுகுறித்து கூட்டத்தில் தெரியப்படுத்தினேன். ஆனால் இதுவரை மாடுகளை பிடிக்க எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பொன்.ராஜசேகா்: பஸ் நிலையத்தில் ஏற்கனவே இருந்த கடைகளை இடித்து விட்டு புதிதாக கடைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகளை உடனடியாக முடித்து ஏற்கனவே கடை வைத்திருந்தவா்களுக்கு ஒதுக்க வேண்டும். கூட்டத்தில் குடிநீா் தேக்கத் தொட்டி, சிறுபாலம் சுற்றுசுவா் அமைப்பது உள்ளிட்ட 29 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.