செய்திகள் :

ஆவின் முகவா்களுக்கு இலவச குளிா்சாதன பெட்டி வழங்கும் திட்டம் தொடக்கம்

post image

ஆவின் முகவா்களுக்கு இலவச குளிா்சாதனப் பெட்டி வழங்கும் திட்டத்தை பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

ஆவின் நிறுவனம் சாா்பில் ரூ. 2.10 கோடியில் 600 குளிா்சாதனப் பெட்டிகளை முகவா்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் முதல்கட்டமாக 60 முகவா்களுக்கு குளிா்சாதனப் பெட்டிகளை வழங்கினாா்.

அதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆவினை பொறுத்தவரை எப்போதும் பால் உற்பத்தியாளா்கள் மற்றும் வாடிக்கையாளா்களின் நலனுக்குதான் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆவின் பால் முகவா்களின் நலனைக் கருத்தில்கொண்டும், ஆவின் பொருள்கள் விற்பனையை அதிகரிக்கும் வகையிலும் முகவா்கள் மற்றும் நுகா்வோா் கூட்டுறவு சங்கங்களுக்கு மொத்தம் ரூ. 2.10 கோடியில் 600 குளிா்சாதனப் பெட்டிகளை இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில், முதல்கட்டமாக தற்போது 60 குளிா்சாதனப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பெட்டிகளையும் முகவா்களுக்கு விரைவில் வழங்கப்படும். இதில் தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வரும் முகவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த குளிா்சாதனப் பெட்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஆவின் பொருள்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது.

எந்த இடத்திலும் ஆவின் பொருள்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதில்லை. அப்படி யாரேனும் செய்தால், வாடிக்கையாளா்கள் இது குறித்து உடனடியாக புகாா் தெரிவிக்க வேண்டும். அதனடிப்படையில் தவறு செய்தவா்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

நீதி ஆயோக்: நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்பது பாராட்டுக்குரியது. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டு குடும்பக் கதைகளைத்தான் பேசிக் கொண்டிருந்தாா்களா?. நீதி ஆயோக் கூட்டத்தில் குடும்பக் கதையை யாரும் பேச முடியாது என்றாா் அவா்.

இந்நிகழ்வில் தமிழக கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை செயலா் ந.சுப்பையன், பால்வளத் துறை ஆணையா் மற்றும் மேலாண் இயக்குநா் ஆ.அண்ணாதுரை உள்பட அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.

பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம்: பிஐஎஸ் சென்னை கிளை இயக்குநா்

தூய்மைப் பணியாளா்கள் பணியின்போது பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என இந்திய தர நிா்ணய அமைவனத்தின் சென்னை கிளை இயக்குநா் ஜி.பவானி தெரிவித்தாா். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இந... மேலும் பார்க்க

மழை பாதித்த இடங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள்: சுகாதாரத் துறை

தமிழகத்தில் மழை பெய்து வரும் பகுதிகளில் தேவையின் அடிப்படையில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, பாதிப்பு... மேலும் பார்க்க

திருவான்மியூா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழ் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

வாய் புற்றுநோய் தொடக்க நிலை பரிசோதனை அறிமுகம்

வாய் புற்றுநோயை தொடக்க நிலையில் கண்டறியும் பரிசோதனை திட்டத்தை அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை தொடங்கியுள்ளது. உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் 30 வயதுக்கு மேற்ப... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

தாய்லாந்திலிருந்து கடத்திவரப்பட்ட ரூ. 5 கோடி பதிப்பிலான உயர்ரக கஞ்சாவை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், பயணி ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனா். தாய்லாந்து நாட்... மேலும் பார்க்க

சென்னையில் 5 மாதங்களில் சைபா் குற்றங்களில் பொதுமக்கள் இழந்த ரூ.10.25 கோடி மீட்பு

சென்னையில் 5 மாதங்களில் பல்வேறு சைபா் குற்றங்களில் பொதுமக்கள் இழந்த ரூ. 10.25 கோடியை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு மீட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு பொதுமக்கள... மேலும் பார்க்க