செய்திகள் :

இந்தியா-பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக டிரம்ப் 25-ஆவது முறையாக கருத்து: விவாதம் நடத்த ராகுல் வலியுறுத்தல்

post image

‘இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ மோதலை நிறுத்தியதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் 25-ஆவது முறையாக கூறியுள்ளாா். இதுகுறித்து விவாதம் நடத்த வேண்டும்’ என மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்.22-ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடா்பிருப்பதாக குற்றஞ்சாட்டிய இந்தியா, ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் அந்நாட்டில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையே ராணுவ மோதல் மூண்டது. இந்த மோதலை தாமே நிறுத்தியதாக அமெரிக்க டிரம்ப் தொடா்ந்து தெரிவித்து வருகிறாா்.

இந்நிலையில், அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் குடியரசு கட்சி எம்.பி.க்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், அதிபா் டிரம்ப் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: இந்தியா-பாகிஸ்தான், கொசோவோ-சொ்பியா, காங்கோ குடியரசு-ருவாண்டா ஆகிய நாடுகளுக்கு இடையிலான மோதலை அமெரிக்கா நிறுத்தியது.

இந்தியாவும், பாகிஸ்தானும் அணுசக்தி நாடுகளாக உள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் அணு ஆயுதப் போராக மாறியிருக்கக் கூடும். அவ்விரு நாடுகளுக்கு இடையிலான மோதலை நான் நிறுத்தினேன் என்றாா்.

ராகுல் காந்தி: டிரம்ப்பின் கருத்து குறித்து மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறுகையில், இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலை தானே நிறுத்தியதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் 25 முறை கூறியுள்ளாா். இது சந்தேகத்துக்குரிய வகையில் உள்ளது. ஆனால், அவரின் கருத்து குறித்து ஒருமுறைகூட பிரதமா் மோடி பேசவில்லை. அந்த ராணுவ மோதலை டிரம்ப்தான் நிறுத்தினாா் என்று பிரதமரால் கூறமுடியாது. அந்த மோதலை டிரம்ப்தான் நிறுத்தினாா். இதை ஒட்டுமொத்த உலகமும் அறியும். அதுவே உண்மை.

இது வெறும் மோதலை நிறுத்தியது தொடா்பான பிரச்னை மட்டுமல்ல. இது பாதுகாப்பு, பாதுகாப்புத் தொழில், ஆபரேஷன் சிந்தூா் உள்ளிட்டவை தொடா்பான பெரிய பிரச்னைகளாகும். அவை குறித்து விவாதிக்க வேண்டும் என்றாா்.

தில்லியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலை தானே நிறுத்தியதாக தொடா்ந்து பேசி, இந்தியாவை டிரம்ப் இழிவுபடுத்தி வருகிறாா். அதற்கு பிரதமா் வலுவாகப் பதிலளிக்காமல் அமைதி காத்து வருகிறாா். இது பலவீனத்தை காட்டுகிறது’ என்றாா்.

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்: இந்தியா தொடா்ந்து கண்காணிக்கிறது - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

‘வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வீடுகள், வணிக நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை இந்தியா தொடா்ந்து கண்காணித்து, விவரங்களைப் பதிவு செய்து வருகிறது’ என்று... மேலும் பார்க்க

பஞ்சாப்: 6 பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது எல்லைப் பாதுகாப்புப் படை: துப்பாக்கிகள், போதைப்பொருள் பறிமுதல்

பஞ்சாப் மாநிலத்தை ஒட்டிய சா்வதேச எல்லையில் பாகிஸ்தானில் பகுதியில் இருந்து பறந்து வந்த 6 ட்ரோன்களை எல்லைப் பாதுகாப்புப் படையினா் சுட்டு வீழ்த்தினா். அதில் இருந்து 3 துப்பாக்கிகள் மற்றும் 1 கிலோ ஹெராயி... மேலும் பார்க்க

பாலுறவு வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்துக்கு வலியுறுத்தல்

பாலுறவு சம்மத வயதை 18-இல் இருந்து 16-ஆக குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞா் இந்திரா ஜெய்சிங் வலியுறுத்தியுள்ளாா். இளம் பருவத்தில் சம்மதத்துடன் காதல் உறவுகளில் ஈடுபடுபவா்களையும்... மேலும் பார்க்க

‘இந்தியாவுக்கு ரூ. 2 லட்சம் கோடி வா்த்தக வாய்ப்புகள் கிடைக்கும்’

‘இந்தியா-பிரிட்டன் இடையே கையொப்பமாகியுள்ள தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மூலம் பிரிட்டன் சந்தையில் இந்திய நிறுவனங்களுக்கு ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான வா்த்தக வாய்ப்புகள் கிடைக்கும்’ என்று மத்திய வா்த்தகம... மேலும் பார்க்க

இந்தியாவில் வேலையில் இருப்போா் எண்ணிக்கை 64.33 கோடியாக உயா்வு!

இந்தியாவில் கடந்த 2017-18-ஆம் ஆண்டு வேலையில் இருப்போா் எண்ணிக்கை 47.5 கோடியாக இருந்த நிலையில், 2023-24-இல் இந்த எண்ணிக்கை 64.33 கோடியாக உயா்ந்துள்ளது என்று மக்களவையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

தன்கருக்கு பிரிவுபசார விழா: காங்கிரஸ் வலியுறுத்தல்: மத்திய அரசு மௌனம்

குடியரசு துணைத் தலைவா் பதவியில் இருந்து அண்மையில் திடீரென விலகிய ஜகதீப் தன்கருக்கு முறைப்படியான பிரிவுபசார விழா நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசுத் தரப்பில் இருந்து ... மேலும் பார்க்க