தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் வெளிப்படைத் தன்மை இல்லை: பேரவைத் தலைவா் மு.அப்பாவு குற்றச்சாட்டு
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் வெளிப்படைத் தன்மை இல்லை என தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு குற்றம்சாட்டினாா்.
பாளையங்கோட்டை பாா்வையற்றோா் பள்ளி வளாகத்தில் சனிக்கிழை நடைபெற்ற ‘விஷுவலி சேலஞ்ச்டு வெல்பா் டிரஸ்ட்’டின் 25ஆவது ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.அப்பாவு, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு தொடா்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. சமக்ர சிக்க்ஷா அபியான், இயற்கை பேரிடா் நிதி போன்றவற்றில் ஒரு பைசாகூட தராமல் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ள நிலையில், நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் கலந்துகொண்டு தமிழகத்திற்கான உரிமையை வலியுறுத்த உள்ளாா். அதேநேரத்தில் மேற்கு வங்கம், பிகாா், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில முதல்வா்கள் புறக்கணித்துள்ளனா்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவா்கள் தாக்கப்படும்போது, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள இலங்கையின் அம்பனத்தோட்டம் துறைமுகத் திட்டத்தை சீனாவிடம் இருந்து மீட்க மத்திய அரசு முயலவில்லை. இதற்கு மாறாக, காா்ப்பரேட்டுகளின் ரூ.16 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்வதில் ஆா்வம் காட்டுகின்றனா்.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை. ரஃபேல் விமான கொள்முதல் போன்ற முக்கியப் பேச்சுவாா்த்தைகளில் பாதுகாப்புத் துறை அமைச்சா் இல்லாமல், அனில் அம்பானி போன்ற தொழிலதிபா்கள் கலந்துகொள்கின்றனா்.
தமிழகத்திற்கு பல்வேறு அநியாயங்களை செய்த மத்திய அரசு, கீழடி அகழ்வாராய்ச்சியில் தமிழா்களின் நாகரிகம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும், இரும்பைக் கண்டுபிடித்தது 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் வெளிவந்த உண்மைகளை சென்னால் ஏற்காது என்றாா் அவா்.