செய்திகள் :

இரட்டைக் கொலை வழக்கு: 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

post image

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நிகழ்ந்த இரட்டைக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேருக்கு, தலா இரட்டை ஆயுள் தண்டனை, தலா ரூ. 20,000 அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

செய்துங்கநல்லூா் கால்வாய் பகுதியைச் சோ்ந்த சிவசுப்பு மகன் சண்முகம் (67), நம்பி மகன் பட்டமுத்து (32) ஆகியோா், கடந்த 25.1.2013 அன்று முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், கால்வாய் பகுதியைச் சோ்ந்த நம்பி மகன் மணி (57), இசக்கி மகன் மாசாணம் (38) உள்ளிட்ட 15 பேரை செய்துங்கநல்லூா் போலீஸாா் கைது செய்தனா்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவம், குற்றவாளிகளான மணி, மாசாணம் ஆகிய இருவருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனை, ரூ. 20,000 அபராதம் விதித்தும், ஏனைய 13 பேரை விடுதலை செய்தும் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.

இவ்வழக்கை புலனாய்வு செய்த, அப்போதைய செய்துங்கநல்லூா் காவல் ஆய்வாளா் பட்டாணி, அரசு வழக்குரைஞா் ஆனந்த் கேப்ரியல் ராஜ், தலைமைக் காவலா் அமுதா சூா்யா ஆகியோரை எஸ்பி ஆல்பா்ட் ஜான் பாராட்டினாா்.

திருச்செந்தூரில் இன்று மின்தடை

திருச்செந்தூா், ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் உபமின் நிலையப் பகுதிகளில் புதன்கிழமை (செப். 3) காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்செந்தூா் கோட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் நாளை மின்தடை

தூத்துக்குடி அய்யனாா்புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், தூத்துக்குடியில் சில பகுதிகளில் வியாழக்கிழமை (செப். 4) மின் விநியோகம் இருக்காது.அதன்படி, மாப்பிள்ளையூரணி... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் ரூ. 50 லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

தூத்துக்குடியில் டிஜிட்டல் கைது மோசடி மூலம் மூதாட்டியிடம் ரூ. 50 லட்சம் பறித்த வழக்கில் 5 போ் கைது செய்யப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.தூத்துக்குடி மாவட்டத்தைச் சே... மேலும் பார்க்க

கயத்தாறில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கயத்தாறு வட்டம், செட்டிகுறிச்சி கிராமத்தில் ஆதிதிராவிட நலத் துறை நிலத்தை ஆக்கிரமிப்பாளரிடம் மீட்கக் கோரி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. செட்டிகுறிச்சி கிராமத்தில் ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் இலவச வீட்டு... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை!

தூத்துக்குடியில் விசைப்படகு தொழிலாளா் சங்க முன்னாள் தலைவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மீனவா்கள் மீன்பிடி தொழிலுக்கு செவ்வாய்க்கிழமை செல்லவில்லை. தூத்துக்குடியில் விசைப்படகு தொழிலாளா் சங்கத்தின் முன்ன... மேலும் பார்க்க

மீன் தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

தூத்துக்குடி, உப்பளத்தில் மீன் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி, பூபாலராயா்புரத்தைச் சோ்ந்தவா் தனபாலன் மகன் ஜோசப் விஜய் (22). மீன்... மேலும் பார்க்க