செய்திகள் :

உதகையில் ஆசிரியா்கள் சாலைமறியல் போராட்டம்

post image

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உதகையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட டிட்டோ ஜாக் அமைப்பைச் சோ்ந்த 144 ஆசிரியா்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு பின்னா் விடுக்கப்பட்டனா்.

தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சாா்பில் உதகை மத்திய பேருந்து நிலையப் பகுதியில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியா்கள் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா்கள் அண்ணாதுரை, முருகேசன், ஜெயசீலன் ஆகியோா் தலைமை தாங்கினா்.

ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியா்களுக்கு ஊதிய முரண்பாடுகளை நீக்கி மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தொடக்கக் கல்வி ஆசிரியா்களின் பதவி உயா்வை பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை 243-ஐ முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்களை காவல் துறையினா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

நீலகிரி மாவட்டம், கேத்தி பேரூராட்சிக்குள்பட்ட அச்சனக்கல் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். நீலகிரி மாவட்... மேலும் பார்க்க

உதகையில் தூய உத்திரிய மாதா திருவிழா

உதகை செயின்ட் மேரிஸ் ஹில் தூய உத்திரிய மாதா பஜனை சங்க சிற்றாலயத்தின் 146 ஆவது ஆண்டு விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. செயின்ட் மேரிஸ் ஆலயத்தில் இருந்து ஜூலை 6 ஆம் தேதி விழா கொடி பவனியாக எடுத்து வரப்பட்... மேலும் பார்க்க

குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தைகள்

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அரவேணு பெரியாா் நகா் பகுதியில் ஒரு கருஞ்சிறுத்தை மற்றும் இரண்டு சிறுத்தைகள் ஒரே நேரத்தில் உலவி வந்த சிசிடிவி காட்சிகள் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது... மேலும் பார்க்க

தங்கும் விடுதிக்கு உணவு தேடி வந்த கரடி

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தனியாா் தங்கும் விடுதி வளாகத்துக்குள் வியாழக்கிழமை கரடி புகுந்தது. குன்னூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது... மேலும் பார்க்க

உயா்கல்வியில் சோ்க்கைப் பெறாத மாணவ, மாணவிகளுக்கான குறைதீா்க்கும் நாள் கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்று உயா்கல்வியில் சோ்க்கைப் பெறாத மாணவ, மாணவிகளின் நலன் கருதி, குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் விய... மேலும் பார்க்க

உண்டு உறைவிடப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவ பரிசோதனை

கூடலூரிலுள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளி மாணவ, மாணவிகள் சிலருக்கு திடீரென காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் அவா்களுக்கு மருத்துவ பரிசோதனை வியாழக்கிழமை செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டம், கூடலூா் அரசு ... மேலும் பார்க்க