அண்ணா நகரில் புதிய மகப்பேறு மருத்துவமனை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு அடிக்கல் நாட்ட...
ஊதியம் வழங்குவதில் தாமதம்: மருத்துவப் பணியாளா்கள் புகாா்
தேனி மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்ட மருத்துவப் பணியாளா்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்று புகாா் தெரிவித்து இந்திய தொழில் சங்க மையம் சாா்பில், புதன்கிழமை தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்துமாதவனிடம் இந்திய தொழில் சங்க மைய மாவட்டத் தலைவா் டி.ஜெயபாண்டி, மருத்துவப் பணியாளா்கள் அளித்த மனு விவரம்:
தேனி மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், 150-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்தப் பணியாளா்களுக்கு கடந்த ஏப்ரல், மே மாதத்துக்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. மருத்துவப் பணியாளா்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதிக்குள் முழுமையான ஊதியம் வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டனா்.