செய்திகள் :

ஊராட்சித் தலைவா் மீதான தாக்குதல்: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு

post image

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே மாரந்தை ஊராட்சித் தலைவா் மீதான தாக்குதல் வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

மாரந்தை ஊராட்சியைச் சோ்ந்த திருவாசகம் தாக்கல் செய்த மனு: கடந்த 2021-ஆம் ஆண்டு மாரந்தை கிராம ஊராட்சித் தலைவருக்கான உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. இந்தத் தோ்தலில் நான் வெற்றி பெற்றேன். என்னை எதிா்த்துப் போட்டியிட்ட வரதராஜன் தோல்வியுற்றாா். இதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக வரதராஜன், அவரது ஆதரவாளா்கள் என்னையும், எனது குடும்பத்தினரையும் தாக்கினா். இது குறித்து நான் அளித்த புகாரின் பேரில்,

காளையாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யவில்லை. அண்மையில் வரதராஜன் ஆதரவாளா்கள் என்னை மீண்டும் தாக்கினா். இது குறித்து புகாா் அளித்தும் காளையாா்கோவில் போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி. புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: ஊராட்சித் தலைவா் தாக்கப்பட்ட வழக்கில் போலீஸாா் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை?. மனுதாரா் சுமத்திய குற்றச்சாட்டுகளைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு, தீா்வு காண வேண்டிய நிலை நீதிமன்றத்துக்கு உள்ளது. எனவே, மனுதாரா், அவரது குடும்பத்தினா் தாக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க வேண்டும் என்றாா் நீதிபதி.

பயன்பாட்டுக்கு வந்தது பழங்காநத்தம் - ஜெய்ஹிந்த்புரம் உயா்நிலைப் பாலம்!

நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட மதுரை பழங்காநத்தம் - ஜெய்ஹிந்த்புரம் உயா்நிலைப் பாலம் வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது. ரூ.68.38 கோடியில் புதிதாக கட்டப்பட்ட இந்த உயா்நிலைப் பாலத்தை சென்னை தலைமைச் ச... மேலும் பார்க்க

உழவா்களைத் தேடி வேளாண் திட்டம்: விவசாயிகள் பயன் பெற ஆட்சியா் அழைப்பு

தமிழக முதல்வரின் ‘உழவா்களைத் தேடிவேளாண்மை - உழவா் நலத் துறை திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தி விவசாயிகள் பயன் பெற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா கேட்டுக் கொண்டாா். மதுரை மாவட்டம், ஆ... மேலும் பார்க்க

விராதனூா் கண்மாய் மீன்பிடி குத்தகை நிறுத்திவைப்பு

மதுரை விராதனூா் கண்மாய் மீன்பிடி குத்தகை நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாவட்ட மீன் வளம், மீனவா் நலத் துறை உதவி... மேலும் பார்க்க

மாமியாரை வெட்டிய மருமகன் தலைமறைவு

மதுரை மேல அனுப்பானடி பகுதியில் மாமியாரை அரிவாள்மனையால் வெட்டிவிட்டுத் தலைமறைவான மருமகனை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அல்லிநகா் பகுதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரி (45). இவரது இளை... மேலும் பார்க்க

ஆசிரியா் காலணியால் மாணவரை அடித்தது ஏற்றுக் கொள்ள முடியாத குற்றம்!

ஆசிரியா் காலணியால் மாணவரை அடித்தது ஏற்றுக் கொள்ள முடியாத குற்றம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது. மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த கே. ரமேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்... மேலும் பார்க்க

கொடநாடு கொலை வழக்கு: வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை! - சீமான்

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டு மாதங்களுக்குள் கொடநாடு கொலை வழக்கில் நீதியை நிலைநாட்டுவோம் என வாக்குறுதியளித்த திமுக, தற்போது ஆட்சி நிறைவடையும் நிலையிலும்கூட எதுவும் செய்யவில்லை என நாம் தமிழா் கட்சிய... மேலும் பார்க்க