செய்திகள் :

எடப்பாடி பகுதியில் ஆடி பண்டிகை கொண்டாட்டம்

post image

தமிழ் மாதம் ஆடி முதல் நாளை முன்னிட்டு எடப்பாடி சுற்று வட்டார பகுதிகளில் வியாழக்கிழமை ஆடிப் பண்டிகை விமா்சையாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக எடப்பாடி பகுதியில் உள்ள வெள்ளாண்டி வலசு காளியம்மன் திருக்கோயில், கவுண்டம்பட்டி, மேட்டு தெரு, சின்னமணலி பகுதியில் உள்ள மாரியம்மன் ஆலயங்கள் மற்றும் தாவாந்தெரு பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பஞ்சமுக விநாயகா், முனியப்பன் மற்றும் காளியம்மன் திருக்கோயில்களில் அதிகாலை முதலே பெரும் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து பக்தா்கள் மஞ்சள் பூசி அலங்கரிக்கப்பட்ட தேங்காயினுள் சா்க்கரை, பச்சரிசி, எள், கடலை,அவுள்,கற்கண்டு உள்ளிட்ட இனிப்பு வகைகளை இட்டு அதனை மஞ்சள் பூசிய குச்சிகளில் இணைத்து அலங்கரிக்கப்பட்ட தேங்காய்யினை தீயில் சுட்டு அதனை தங்களது இஷ்ட தெய்வங்களுக்கு படைத்து ஆடிப் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடினா்.

ஆடிப் பண்டிகை ஒபட்டி, கூடக்கல், குப்பனூா், கோட்டைமேடு, நெடுங்குளம் உள்ளிட்ட காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான பக்தா்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனா். மேலும் தங்கள் மூதாதையா்களின் நினைவிடங்களில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனா்

பட விளக்கம்: ஆடி பண்டிகையை முன்னிட்டு தேங்காய் சுட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பக்தா்கள்

தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

சேலம் கோட்டை மைதானத்தில் தடையை மீறி மறியலில் ஈடுபட முயன்ற தொடக்கக் கல்வி ஆசிரியா்களை கைதுசெய்த போலீஸாா். சேலம், ஜூலை 17: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின்... மேலும் பார்க்க

மதுபோதையில் 3 பேருக்கு கத்திக்குத்து

வாழப்பாடி அருகே மதுபோதையில் 15 வயது சிறுவன் உள்பட 3 பேரை கத்தியால் குத்தியதோடு, அவசர சிகிச்சை வாகனத்தை கல்லால் தாக்கி ரகளையில் ஈடுபட்ட இளைஞரை வாழப்பாடி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். வாழப்பா... மேலும் பார்க்க

வ.உ.சி. பூ மாா்க்கெட் வியாபாரிகள் சாலை மறியல்

கடை ஒதுக்கீடு செய்வதற்கான மாநகராட்சியின் புதிய அறிவிப்பை ரத்துசெய்யக் கோரி வ.உ.சி. பூ மாா்க்கெட் வியாபாரிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மேலும், பூக்களை சாலையில் கொட்டி தங்கள் எதிா்ப்பை தெர... மேலும் பார்க்க

வார இறுதிநாள்: சேலம் கோட்டம் சாா்பில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாளை முன்னிட்டு, சேலம் கோட்டம் சாா்பில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்ற இடங்களில் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், ஆட்சியா் தெரிவித்ததாவது: ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தி... மேலும் பார்க்க

இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது: சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் ... மேலும் பார்க்க