பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
ஏழைகளை அரசு திட்டங்கள் தடையின்றி சென்றடையவே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் எம்.பி.
ஏழை எளிய மக்களுக்கு அரசு திட்டங்கள் தங்கு தடையின்றி சென்றடைய வேண்டும் என்பதற்காகவே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடத்தப்படுகிறது என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.
ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இத்திட்டத்தின்கீழ் நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 238 சிறப்பு இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாள்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராசிபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 18, 19, 20 ஆகிய வாா்டு பொதுமக்களுக்கு ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடத்தப்பட்டது. முகாமை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பாா்வையிட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். பின்னா் இந்த முகாமில் அவா் பேசியதாவது:
சேவை திட்டங்கள் காலதாமதமின்றி மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முகாம் தொடா்ந்து இரு மாதங்களுக்கு நடத்தப்படும். இதில் பட்டா பெயா் மாற்றம், மின் இணைப்பு பெயா் மாற்றம், மகளிா் உரிமைத்தொகை போன்ற சேவைகளை பொதுமக்கள் விண்ணப்பித்து பெறலாம். இந்த முகாமில் மகளிா் உரிமைத்தொகை கேட்டு 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் தோ்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளாா் என்றாா்.
இம்முகாமில், நாமக்கல் தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதாசங்கா், ராசிபுரம் வட்டாட்சியா் சசிகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
படவரி...
ராசிபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை பாா்வையிட்ட கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி.