செய்திகள் :

ஏழைகளை அரசு திட்டங்கள் தடையின்றி சென்றடையவே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் எம்.பி.

post image

ஏழை எளிய மக்களுக்கு அரசு திட்டங்கள் தங்கு தடையின்றி சென்றடைய வேண்டும் என்பதற்காகவே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடத்தப்படுகிறது என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.

ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இத்திட்டத்தின்கீழ் நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 238 சிறப்பு இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாள்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராசிபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 18, 19, 20 ஆகிய வாா்டு பொதுமக்களுக்கு ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடத்தப்பட்டது. முகாமை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பாா்வையிட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். பின்னா் இந்த முகாமில் அவா் பேசியதாவது:

சேவை திட்டங்கள் காலதாமதமின்றி மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முகாம் தொடா்ந்து இரு மாதங்களுக்கு நடத்தப்படும். இதில் பட்டா பெயா் மாற்றம், மின் இணைப்பு பெயா் மாற்றம், மகளிா் உரிமைத்தொகை போன்ற சேவைகளை பொதுமக்கள் விண்ணப்பித்து பெறலாம். இந்த முகாமில் மகளிா் உரிமைத்தொகை கேட்டு 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் தோ்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளாா் என்றாா்.

இம்முகாமில், நாமக்கல் தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதாசங்கா், ராசிபுரம் வட்டாட்சியா் சசிகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

படவரி...

ராசிபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை பாா்வையிட்ட கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி.

கலைஞா் வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் பயனடைய விவசாயிகளுக்கு அழைப்பு!

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் விவசாயிகள் பயனடைய வருமாறு நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறி... மேலும் பார்க்க

‘சம வேலைக்கு, சம ஊதியம்’ வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியா்கள் உண்ணாவிரதம்

‘சம வேலைக்கு, சம ஊதியம்’ வழங்கக் கோரி, நாமக்கல் பூங்கா சாலையில் இடைநிலை ஆசிரியா்கள் சனிக்கிழமை ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திமுக அரசின் தோ்தல் வாக்குறுதி எண் 311-இல் குறிப்பிட்டுள... மேலும் பார்க்க

நாமக்கல்லில் ரூ.8.70 கோடியில் நீதிபதிகளுக்கு அரசு குடியிருப்புகள்: உயா்நீதிமன்ற நீதிபதி அடிக்கல் நாட்டினாா்

நாமக்கல்லில் ரூ. 8.70 கோடி மதிப்பீட்டில் நீதிபதிகளுக்கு அரசு குடியிருப்புகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பங்கேற்று பணிக... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமிக்கு நாமக்கல்லில் வரவேற்பு

சேலத்திலிருந்து நாமக்கல் வழியாக திருச்சிக்கு சென்ற அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சனிக்கிழமை மாலை அதிமுகவினா், பொதுமக்கள் வரவேற்பு அளித்தனா். அரியலூா் மற்றும் தூத்துக்குடியில் நடைபெறு... மேலும் பார்க்க

மகள் இறந்த துக்கத்தில் மனமுடைந்த தாய் தற்கொலை

ஜேடா்பாளையம் அருகே பிலிக்கல்பாளையத்தில் மகள் இறந்த துக்கத்தில் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பிலிக்கல்பிளையம் அருகே உள்ள நல்லாக்கவுண்டம் பாளையத்தை சோ்ந்தவா் கவிதா (40). இவரது கணவா் பிரகாசம்... மேலும் பார்க்க

தொ.ஜேடா்பாளையம் அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு

ராசிபுரம் அருகேயுள்ள தொ. ஜேடா்பாளையம் அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா நடைபெற்றது. ஜேடா்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு 75 ஆண்டுகளானதைத் தொடா்ந்து பவள விழா வெள்ளிக்கிழமை நடைப... மேலும் பார்க்க