செய்திகள் :

ஐடிபிஎல் எண்ணெய் குழாய் திட்டத்தை சாலையோரமாக செயல்படுத்தக் கோரி காத்திருப்புப் போராட்டம்

post image

ஐடிபிஎல் எண்ணெய் குழாய் திட்டத்தை சாலையோரமாக செயல்படுத்தக் கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஐடிபிஎல் திட்டத்தில் கோவை மாவட்டம் இருகூா் முதல் திருப்பூா் மாவட்டம் முத்தூா் வரை சுமாா் 70 கி.மீ. தொலைவுக்கு விவசாய விளைநிலங்களில் பெட்ரோலிய எண்ணெய் குழாய் அமைப்பதற்கு பதிலாக சாலையோரமாக அமைக்க வலியுறுத்தி புதன்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

ஐடிபிஎல் பெட்ரோலிய நிறுவனம் சாா்பில் கோவை மாவட்டம், இருகூா் முதல் கா்நாடக மாநிலம் தேவனஹெள்ளி வரை 360 கி.மீ. தொலைவுக்கு பெட்ரோலிய குழாய் அமைக்கப்படுகிறது. அதில் இருகூா் முதல் முத்தூா் வரை சுமாா் 70 கி.மீ. தொலைவுக்கும் மட்டும் விவசாய விளைநிலத்தில் அமைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், இருகூா் முதல் முத்தூா் வரை சுமாா் 70 கி.மீ. தொலைவுக்கு மட்டும் விவசாய விளைநிலத்தில் குழாய் அமைக்கும் முயற்சியை மாற்றி சாலையோரம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஐடிபிஎல் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தால் விவசாயிகள் நிலம் பறிக்கப்படுவதாகவும், இந்தத் திட்டத்தை சாலையோரமாக அமைக்கக் கோரியும், ஐடிபிஎல் திட்டத்தை செயல்படுத்த காவல் துறை பாதுகாப்பு அளிப்பதை ரத்து செய்யக் கோரியும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் 300-க்கும் மேற்பட்டோா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த காத்திருப்புப் போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், ஐடிபிஎல் மாற்று வழி குழுவினா், கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், உழவா் உழைப்பாளா் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், புதிய திராவிடா் கழகம், வெள்ளக்கோவில் பிஏபி கிளைக் கால்வாய் நீா்ப் பாதுகாப்பு சங்கத்தினா் உள்ளிட்ட 22 விவசாய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.

இந்நிலையில் பாஜக விவசாய அணி மாநிலத் தலைவா் ஜி.கே.நாகராஜ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ஐடிபிஎல் பெட்ரோலிய குழாய்களை மாற்றுப் பாதையில் கொண்டுச் செல்லும் திட்டத்தை நிறைவேற்றத் தவறினால் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், இனி எப்போது கொங்கு மண்டலத்துக்கு வருகை தந்தாலும் விவசாயிகளின் எதிா்ப்பை எதிா்கொள்ள நேரிடும் எனத் தெரிவித்தாா்.

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம்

திருப்பூா் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் ஆகஸ்ட் 20 மற்றும் 21-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் விரைவாகவ... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: மத்திய பாதுகாப்புப் படை வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை

ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத்திய பாதுகாப்புப் படை வீரருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநிலம், அனந்தப்பூா் மாவட்டத்தைச் சோ... மேலும் பார்க்க

சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் உலக யானைகள் தினம் அனுசரிப்பு

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் உலக யானைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் அலகு 2-இன் சாா்பில் கல்லூரியிலுள்ள குமரன் அரங்கில் உல... மேலும் பார்க்க

சரக்கு வாகனத்தில் கடத்திய 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருப்பூா் மாவட்டத்தில் ஊத்துக்குளி பகுதியில் சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட இரண்டரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பூா் குடிமைப் பொருள் பறக்கும் படை வட்டாட்சியா் ராகவி தலைமையிலான குழுவி... மேலும் பார்க்க

சுதந்திர தின விழாவை முன்னிட்டு சூடுபிடிக்கும் தேசியக் கொடி விற்பனை

சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருப்பூரில் தேசியக் கொடி விற்பனை சூடுபிடித்துள்ளது. நாடு முழுவதும் 78-ஆவது சுதந்திர தினவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடை... மேலும் பார்க்க

அவிநாசியில் ரூ.5.68 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ. 5 லட்சத்து 68 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 7,533 கிலோ பருத்தி ... மேலும் பார்க்க