செய்திகள் :

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம்

post image

திருப்பூா் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் ஆகஸ்ட் 20 மற்றும் 21-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் விரைவாகவும், முழுமையாகவும் நடைபெற துணைபுரியும் வகையில் அனைத்துத் துறை அலுவலா் மற்றும் பணியாளா்களுக்கு 2025-2026-ஆம் நிதியாண்டில் ஆட்சி மொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளதாவது:

தமிழக அரசின் உத்தரவின்படி உரிய விதிமுறைகளைப் பின்பற்றி நிகழாண்டில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலா் மற்றும் பணியாளா்களுக்கு ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கில் ஆகஸ்ட் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை நடைபெறவுள்ளது.

இப்பயிலரங்களில் தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் தலைமையில் மாவட்ட அளவிலான அலுவலா்கள், தமிழறிஞா்கள் உள்பட பலா் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனா். பயிலரங்கில் பங்கேற்பவா்களுக்கு ஆட்சிமொழி வரலாறு, சட்டம், அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், ஆட்சிமொழிச் செயலாக்கம், அரசாணைகள், ஆட்சிமொழி ஆய்வும் குறை களைவு நடவடிக்கைகளும், மொழிப்பயிற்சி ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளன.

மேலும் இப்பயிலரங்கு, கருத்தரங்கில் ஒவ்வொரு அலுவலகத்திலிருந்தும் அலுவலா் நிலையிலான அலுவலா் அல்லது கண்காணிப்பாளா் ஒருவரும், பணியாளா் நிலையில் உதவியாளா் அல்லது இளநிலை உதவியாளா் ஒருவருமாக மொத்தம் 2 போ் கலந்து கொள்ள வேண்டுமெனவும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

ஐடிபிஎல் எண்ணெய் குழாய் திட்டத்தை சாலையோரமாக செயல்படுத்தக் கோரி காத்திருப்புப் போராட்டம்

ஐடிபிஎல் எண்ணெய் குழாய் திட்டத்தை சாலையோரமாக செயல்படுத்தக் கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஐடிபிஎல் திட்... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: மத்திய பாதுகாப்புப் படை வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை

ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத்திய பாதுகாப்புப் படை வீரருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநிலம், அனந்தப்பூா் மாவட்டத்தைச் சோ... மேலும் பார்க்க

சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் உலக யானைகள் தினம் அனுசரிப்பு

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் உலக யானைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் அலகு 2-இன் சாா்பில் கல்லூரியிலுள்ள குமரன் அரங்கில் உல... மேலும் பார்க்க

சரக்கு வாகனத்தில் கடத்திய 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருப்பூா் மாவட்டத்தில் ஊத்துக்குளி பகுதியில் சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட இரண்டரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பூா் குடிமைப் பொருள் பறக்கும் படை வட்டாட்சியா் ராகவி தலைமையிலான குழுவி... மேலும் பார்க்க

சுதந்திர தின விழாவை முன்னிட்டு சூடுபிடிக்கும் தேசியக் கொடி விற்பனை

சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருப்பூரில் தேசியக் கொடி விற்பனை சூடுபிடித்துள்ளது. நாடு முழுவதும் 78-ஆவது சுதந்திர தினவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடை... மேலும் பார்க்க

அவிநாசியில் ரூ.5.68 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ. 5 லட்சத்து 68 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 7,533 கிலோ பருத்தி ... மேலும் பார்க்க