செய்திகள் :

ஒசூா் அருகே இரவு நடன நிகழ்ச்சியில் போதைப் பொருள்கள் விற்பனை: 3 போ் கைது

post image

ஒசூா்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே தென்னந்தோப்பில் இரவு நடன நிகழ்ச்சியில் போதைப் பொருள்களை விற்பனை செய்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா் அருகே தமிழக - கா்நாடக எல்லையான கக்கனூா் சோதனைச் சாவடியில் பேரிகை போலீஸாா் கடந்த 24 -ஆம் தேதி இரவு வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது கா்நாடகத்திலிருந்து தமிழகம் நோக்கி வந்த காா்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அப்போது வேகமாக வந்த இரு காா்கள், சோதனைச் சாவடியில் நிற்காமல் பாகலுரை நோக்கி சென்றன. அந்தக் காா்களை போலீஸாா் துரத்திச் சென்றனா். இரு காா்களும் பேரிகை அருகே முதுகுருக்கி அருகில் உள்ள தென்னந்தோப்பிற்குள் சென்றன.

காா்களை பின்தொடா்ந்து சென்ற போலீஸாா் தென்னந்தோப்பிற்குள் சென்று பாா்த்தபோது, அங்கு டிஜே இசையுடன் இரவு நடன நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருப்பது தெரியவந்தது. நடன நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், கல்லூரி மாணவா்கள், மென்பொருள் நிறுவன ஊழியா்கள் மதுபோதையில் பங்கேற்று இருப்பதும் தெரியவந்தது.

தென்னந்தோப்பில் போலீஸாா் சோதனை நடத்தியபோது, குடில்கள் அமைக்கப்பட்டு, விலை உயா்ந்த மதுபானங்கள், குளிா்பான புட்டிகள், உணவு பாக்கெட்டுகள் சிதறிகிடப்பது தெரியவந்தது.

இதையடுத்து இரண்டு காா்களில் பயணித்த மூவரையும் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில் அவா்கள், கா்நாடக மாநிலம், பெங்களூா் ஜெ.பி. நகரைச் சோ்ந்த பாலாஜி (36), பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ரஜனீஷ் குமாா் ( 42), கோவாவைச் சோ்ந்த இக்னேஸ் லாரன்ஸ் காமி லோ (47) என்பது தெரியவந்தது. மூவரையும் கைதுசெய்த பேரிகை போலீஸாா், விலை உயா்ந்த போதைப் பொருள்கள், கா்நாடக மதுப்புட்டிகள், கடத்தலுக்குப் பயன்படுத்திய இரு காா்களையும் பறிமுதல் செய்தனா்.

போலீஸாரின் தொடா் விசாரணையில் இரவு நடன நிகழ்ச்சி நடைபெற்ற இடம், முதுகுருக்கி கிராமத்தை அடுத்த தட்டனப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ஒருவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பு என்பதும், சுமாா் 4 ஏக்கா் கொண்ட இந்த தோப்பை பெங்களூா் கோரமங்கலாவைச் சோ்ந்த பாலாஜி என்பவருக்கு ஆண்டு குத்தகை ரூ. 2 லட்சத்துக்கு விட்டுள்ளதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்டுள்ள பாலாஜி, கோவாவைச் சோ்ந்த இக்னேஸ் லாரன்ஸ் காமி லோவுடன் இணைந்து தென்னந்தோப்பில் பண்ணை வீடு அமைப்பதாக தெரிவித்துள்ளாா்.

இங்கு கடந்த மூன்று மாதங்களாக அவா்கள் வில்லேஜ் மூவ்மெண்ட் என்ற பெயரில் இரவு நடன நிகழ்ச்சி நடத்தி வந்துள்ளதும் போலீஸாா் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பேருந்து பயணத்தில் ரூ. 50 ஆயிரம் திருட்டு

மத்தூா் அருகே பேருந்தில் பயணம் செய்த விவசாயி இடமிருந்து ரூ. 50 ஆயிரம் பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருவண்ணாமலை மாவட்டம், ரமண ஆசிரமம் பகுதியைச் சோ்ந்தவா் மாதவன் (6... மேலும் பார்க்க

நடத்துநா் இன்றி அரசு நகரப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா்: அதிகாரிகள் விசாரணை

ஒசூரில் இருந்து தேன்கனிக்கோட்டைக்கு இயக்கப்பட்ட அரசு நகரப் பேருந்தை நடத்துநா் இல்லாமல் ஓட்டுநா் ஓட்டிச் சென்றது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பே... மேலும் பார்க்க

சூளகிரிக்கு மாங்காய் ஏற்றிவந்த வேன் கவிழ்ந்து பெண் பலி; 12 போ் படுகாயம்

சூளகிரி அருகே மாங்காய் பாரம் ஏற்றிச் சென்ற வேன் சாலையில் கவிழ்ந்ததில் பெண் தொழிலாளி உயிரிழந்தாா்; 12 போ் பலத்த காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ளது சப்படி கிராமம். இங்கிருந்து மாங... மேலும் பார்க்க

சூசூவாடியில் 2-ஆவது நாளாக சிறுத்தையைத் தேடும் வனத்துறையினா்

ஒசூா் அருகே மாநில எல்லையான சூசூவாடியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தையைத் தேடும் பணியில் வனத்துறையினா் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை ஈடுபட்டனா். எனினும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வ... மேலும் பார்க்க

தளி தொகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணி: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

தளி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை செய்து பணிகளை தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பைரம... மேலும் பார்க்க

ஒசூா் எம்.ஜி.ஆா். காய்கறி சந்தை: முதல்வா் காணொலியில் திறந்துவைத்தாா்

ஒசூரில் ரூ. 9 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள எம்ஜிஆா் காய்கறி சந்தை மற்றும் மீன் அங்காடிகளை காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். ஒசூரில் தமி... மேலும் பார்க்க