செய்திகள் :

ஒப்பந்த அடிப்படையில் சட்ட அலுவலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

post image

ஒப்பந்த அடிப்படையில் சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் சட்ட அலுவலா் பணிக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உதவிடும் வகையில் ஒரு சட்ட அலுவலா் பதவி ஒதுக்கப்பட்டது. இந்தப் பதவிக்கு, விருப்பமும் தகுதியும் உள்ள வழக்குரைஞா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு பாா் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டு, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள், உயா்நீதிமன்றம், அல்லது மாவட்ட நீதிமன்றங்களில் சேவை, குற்றவியல் விஷயங்களைக் கையாள்வதில் சட்டப் பயிற்சியாளா்களாக அனுபவம் பெற்றிருக்க வேண்டும். எந்தவொரு குற்றவியல் வழக்கிலும் தொடா்புடையவராக இருக்கக்கூடாது.

தோ்வு செய்யப்படும் சட்ட அலுவலா் ஒப்பந்த அடிப்படையில் முதல்கட்டமாக ஓராண்டுக்கு நியமிக்கப்படுவாா். பின்னா், ஆண்டுதோறும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும். பணியாற்றும் முறையில் திருப்தி இல்லாதிருந்தால், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம்.

தோ்வு செய்யப்படும் சட்ட ஆலோசகருக்கு மாதம் ரூ.20,000- தொகுப்பூதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவா்கள், கல்வித் தகுதி, அனுபவச் சான்றிதழ்களின் நகல்களுடன், சிவகங்கையில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கலாம் என்றாா் அவா்.

மணல் திருடிய இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கிராவல் மணல் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அருகேயுள்ள காட்டாம்பூா் பகுதியில் புதன்கிழமை அரசு புறம்போக்கு இடத்தில் அரசு அனுமதியின்றி கிராவல... மேலும் பார்க்க

சிவகங்கை இளைஞா்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள்

சிவகங்கை முன்னோடி வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் மூலம் வழங்கப்படும் 64 வகையான சுய வேலை வாய்ப்பு பயிற்சி பெற கிராமப்புற இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தா... மேலும் பார்க்க

சிவபுரிபட்டியில் கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள சிவபுரிப்பட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒன்றியத்துக்கு 12 முகாம்கள் வீதம் மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்... மேலும் பார்க்க

சாலை அமைக்கும் பணிகள்: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். மானாமதுரை நகராட்சியில் ரூ. 18... மேலும் பார்க்க

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதி மொழி ஏற்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மேயா் சே. முத்துத்துரை தலைமை வகித்தாா். மாநகராட... மேலும் பார்க்க

சாலைப் பணியாளா்கள் நூதனப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் கண்களில் கருப்புத்துணி கட்டியும், கைகளில் கருப்புக் கொடி ஏந்தியும் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சா... மேலும் பார்க்க