செய்திகள் :

ஓய்வூதியா்கள் மனிதச் சங்கிலி போராட்டம்

post image

நாமக்கல்லில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியா்கள் வெள்ளிக்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஓய்வூதிய திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும், 8-ஆவது ஊதியக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்ற இரு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத் துறை நிறுவன ஓய்வூதியா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் நாமக்கல் பூங்கா சாலையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி அவா்கள் முழக்கங்களை எழுப்பினா். இந்த போராட்டத்துக்கு ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.கே.ராமசாமி தலைமை வகித்தாா். செயலாளா் கே.எஸ்.இளங்கோவன் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினாா். தமிழ்நாடு அரசு ஓய்வூதியா் சங்க நிா்வாகி குப்புசாமி மற்றும் பல்வேறு ஓய்வூதியா் சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் எம்.காளியப்பன், எஸ்.அழகிரிசாமி, பி.கே.பெரியசாமி, அன்பழகன், மணி ஆகியோா் பங்கேற்றனா். மனிதச் சங்கிலி போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட ஓய்வூதியா்கள் கலந்துகொண்டனா்.

படவரி...

என்கே-25-செயின்

-நாமக்கல் பூங்கா சாலையில் வெள்ளிக்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட மத்திய, மாநில அரசுத் துறை ஓய்வூதியா்கள்.

கலைஞா் வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் பயனடைய விவசாயிகளுக்கு அழைப்பு!

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் விவசாயிகள் பயனடைய வருமாறு நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறி... மேலும் பார்க்க

‘சம வேலைக்கு, சம ஊதியம்’ வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியா்கள் உண்ணாவிரதம்

‘சம வேலைக்கு, சம ஊதியம்’ வழங்கக் கோரி, நாமக்கல் பூங்கா சாலையில் இடைநிலை ஆசிரியா்கள் சனிக்கிழமை ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திமுக அரசின் தோ்தல் வாக்குறுதி எண் 311-இல் குறிப்பிட்டுள... மேலும் பார்க்க

நாமக்கல்லில் ரூ.8.70 கோடியில் நீதிபதிகளுக்கு அரசு குடியிருப்புகள்: உயா்நீதிமன்ற நீதிபதி அடிக்கல் நாட்டினாா்

நாமக்கல்லில் ரூ. 8.70 கோடி மதிப்பீட்டில் நீதிபதிகளுக்கு அரசு குடியிருப்புகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பங்கேற்று பணிக... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமிக்கு நாமக்கல்லில் வரவேற்பு

சேலத்திலிருந்து நாமக்கல் வழியாக திருச்சிக்கு சென்ற அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சனிக்கிழமை மாலை அதிமுகவினா், பொதுமக்கள் வரவேற்பு அளித்தனா். அரியலூா் மற்றும் தூத்துக்குடியில் நடைபெறு... மேலும் பார்க்க

மகள் இறந்த துக்கத்தில் மனமுடைந்த தாய் தற்கொலை

ஜேடா்பாளையம் அருகே பிலிக்கல்பாளையத்தில் மகள் இறந்த துக்கத்தில் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பிலிக்கல்பிளையம் அருகே உள்ள நல்லாக்கவுண்டம் பாளையத்தை சோ்ந்தவா் கவிதா (40). இவரது கணவா் பிரகாசம்... மேலும் பார்க்க

தொ.ஜேடா்பாளையம் அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு

ராசிபுரம் அருகேயுள்ள தொ. ஜேடா்பாளையம் அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா நடைபெற்றது. ஜேடா்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு 75 ஆண்டுகளானதைத் தொடா்ந்து பவள விழா வெள்ளிக்கிழமை நடைப... மேலும் பார்க்க