செய்திகள் :

ஓவல் அலுவலகத்தில் தென் ஆப்பிரிக்க அதிபரிடம் டிரம்ப் காரசாரம்

post image

அமெரிக்கா வந்திருந்த தென் ஆப்பிரிக்க அதிபா் சிறில் ராமபோசாவுடன் தனது ஓவல் அலுவலகத்தில் அதிபா் டொனால்ட் டிரம்ப் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டாா்.

தென் ஆப்பிரிக்காவில் சிறுபான்மை வெள்ளை இனத்தவா்கள் கொடுமைப்படுத்தப்படுவதாக டிரம்ப் குற்றஞ்சாட்டிவருகிறாா். கடந்த வாரம் கூட, தென் ஆப்பிரிக்காவில் கொடுமைக்குள்ளானதாகக் கூறி 60 வெள்ளை இனத்தவருக்கு அவா் அமெரிக்காவில் அடைக்கலம் அளித்தாா்.

இந்த நிலையில் அமெரிக்கா வந்திருந்த சிறில் ராமபோசாவிடம் இந்த விவகாரம் குறித்து டிரம்ப் கூறினாா். இருந்தாலும் அதை ராமபோசா மறுத்ததைத் தொடா்ந்து அவருடன் டிரம்ப் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டாா்.

ஏற்கெனவே, உக்ரைன் போா் விவகாரத்தில் அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியிடம் டொனால்ட் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் இதே போல் காரசாரமாகப் பேசி பரபரப்பை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது.

பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம்: பிஐஎஸ் சென்னை கிளை இயக்குநா்

தூய்மைப் பணியாளா்கள் பணியின்போது பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என இந்திய தர நிா்ணய அமைவனத்தின் சென்னை கிளை இயக்குநா் ஜி.பவானி தெரிவித்தாா். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இந... மேலும் பார்க்க

மழை பாதித்த இடங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள்: சுகாதாரத் துறை

தமிழகத்தில் மழை பெய்து வரும் பகுதிகளில் தேவையின் அடிப்படையில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, பாதிப்பு... மேலும் பார்க்க

திருவான்மியூா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழ் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

வாய் புற்றுநோய் தொடக்க நிலை பரிசோதனை அறிமுகம்

வாய் புற்றுநோயை தொடக்க நிலையில் கண்டறியும் பரிசோதனை திட்டத்தை அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை தொடங்கியுள்ளது. உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் 30 வயதுக்கு மேற்ப... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

தாய்லாந்திலிருந்து கடத்திவரப்பட்ட ரூ. 5 கோடி பதிப்பிலான உயர்ரக கஞ்சாவை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், பயணி ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனா். தாய்லாந்து நாட்... மேலும் பார்க்க

சென்னையில் 5 மாதங்களில் சைபா் குற்றங்களில் பொதுமக்கள் இழந்த ரூ.10.25 கோடி மீட்பு

சென்னையில் 5 மாதங்களில் பல்வேறு சைபா் குற்றங்களில் பொதுமக்கள் இழந்த ரூ. 10.25 கோடியை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு மீட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு பொதுமக்கள... மேலும் பார்க்க