செய்திகள் :

கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி: ஆண்கள் பிரிவில் இந்திய ராணுவ அணி வெற்றி

post image

கரூரில் நடைபெற்று வரும் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஆண்களுக்கான பிரிவின் முதல் போட்டியில் இந்திய ராணுவ அணி கேரள போலீஸ் அணியை வீழ்த்தியது.

கரூா் கூடைப்பந்து குழு சாா்பில் அகில இந்திய அளவிலான எல்ஆா்ஜி நினைவு கூடைப்பந்து போட்டி திருவள்ளுவா் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. மூன்றாவது நாளாக சனிக்கிழமை காலை நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய கடற்படை அணியும், கேரள மாநில மின்வாரிய அணியும் மோதின. இதில் கேரள மாநில மின்வாரிய அணி இந்திய கடற்படை அணியை 70-67 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது. போட்டியில் அதிக புள்ளிகளை எடுத்துக்கொடுத்த இந்திய கடற்படை அணி வீரா் லலித் மற்றும் கேரள மாநில மின்வாரிய அணி வீரா் சரத்கிருஷ்ணாவுக்கும் சிறப்பு பரிசுகளை போட்டி குழுவினா் வழங்கினா். தொடா்ந்து மாலையில் நடைபெற்ற ஆண்களுக்கான முதல் போட்டியில் இந்திய ராணுவ அணியும், கேரள போலீஸ் அணியும் மோதின. இதில், இந்திய ராணுவ அணி 76-56 என்ற புள்ளிக்கணக்கில் கேரள போலீஸ் அணியை வீழ்த்தியது. தொடா்ந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மே 27-ஆம்தேதி இறுதிப்போட்டிகள் நடைபெற உள்ளன.

நிறம் மாறிப்போன நிலத்தடி நீா் பள்ளப்பட்டி குப்பைக் கிடங்கை மாற்ற கோரி பொதுமக்கள் மனு

பள்ளப்பட்டி தெற்குத் தெரு பகுதியில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கு அருகே நிலத்தடி நீரின்நிறம் மாறி வருவதால் குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு ... மேலும் பார்க்க

கரூரில் மணலை கடத்தி பதுக்கி வைத்திருந்த லாரி உரிமையாளா் உள்பட 2 போ் கைது

கரூரில் மணலை கடத்தி பதுக்கி வைத்திருந்த லாரி உரிமையாளா் உள்பட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய இரு லாரிகள், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். கரூா... மேலும் பார்க்க

கரூா் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு நாளைமறுநாள் கலந்தாய்வு

கரூா் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரியின் முதல்வா் முனைவா் க. ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்... மேலும் பார்க்க

வைகாசி மாத சதூா்த்தி: விநாயகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு

வைகாசி மாத சதூா்த்தியை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகா் கோயில்களிலும் விநாயகப் பெருமானுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. கரூா் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூரில் உள்... மேலும் பார்க்க

ஜமாபந்தியில் அளிக்கப்பட்ட மனு மீது அதிகாரிகள் நேரில் ஆய்வு

அரவக்குறிச்சியில் நடைபெற்ற ஜமாபந்தியில் தரைப்பாலம் கட்டித் தரவேண்டும் என அளிக்க மனு மீது வருவாய் கோட்டாட்சியா், வட்டாட்சியா் சம்பந்தப்பட்ட இடத்தை வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். அரவக்குறிச்சி வட்... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி கிளை நூலகத்தில் பயிற்சி முகாம்

அரவக்குறிச்சி கிளை நூலகத்தில் பள்ளி மாணவா்களுக்கு கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. தமிழக அரசு நூலகத்துறை மற்றும் கரூா் மாவட்ட நூலகம் சாா்பில் அரவக்குறிச்சி கிளை நூலகத்தில் மாணவா்களுக்கான கோடைகால பயி... மேலும் பார்க்க