கா்நாடக இசை டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: மியூசிக் அகாதெமி
கறி விருந்தில் தகராறு: 2 போ் கைது
திருத்துறைப்பூண்டியில் கறி விருந்தில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள வேப்பஞ்சேரியைச் சோ்ந்த கலியமூா்த்திக்கும் (25), நாகை மாவட்டம், திருக்குவளை அருகே ஈசனூரைச் சோ்ந்த பிரதீபாவுக்கும் (22) அண்மையில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, மணமகன் வீட்டில் நடைபெற்ற கறி விருந்தில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக பெண் வீட்டாரை கிழக்கு கடற்கரை சாலையில் சிலா் வழிமறித்து தாக்கினராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, தேசிங்கு ராஜபுரத்தைச் சோ்ந்த ராகுல், சிங்கிளாந்தியை சோ்ந்த முத்துக்குமாா் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.