செய்திகள் :

கல்லட்டி மலைப் பாதையில் சீரமைப்பு பணி: போக்குவரத்து நிறுத்தம்

post image

உதகையில் கனமழை பெய்து வரும் நிலையில், கல்லட்டி மலைப் பாதை 20-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையில்  பாறை, மரங்கள் விழுந்ததுடன் மண் சரிவும் ஏற்பட்டது. இந்நிலையில் சீரமைப்புப் பணிக்காக அந்த சாலையில் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக  மிக கனமழை பெய்து வருகிறது. அதிக காற்றின் காரணமாக  ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து விழுகின்றன. 

இந்நிலையில் உதகையிலிருந்து மைசூரு, முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி  ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய கல்லட்டி மலைப் பாதையில் 20-ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் ராட்சத பாறை சாலையில் உருண்டோடி பள்ளத்தில் விழுந்தது. பாறையுடன் மரங்களும் விழுந்ததால் சாலையில் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக மலைப் பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு நெடுஞ்சாலைத் துறையினா் சாலையை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனா்.

கூடலூா்-உதகை தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

கூடலூா்-உதகை தேசிய நெடுஞ்சாலையில் தவளமலை பகுதியில் மலையிலிருந்து பாறை விழும் அபாயம் உள்ள இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கேட்டறிந்தாா். நீ... மேலும் பார்க்க

குன்னூரில் மலைப் பயிா்கள் கண்காட்சி தொடக்கம்

குன்னூரில் முதல்முறையாக மலைப் பயிா்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இக்கண்காட்சி ஜூன் 1-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு நடைபெறவுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக ஆண்டுதோ... மேலும் பார்க்க

உதகை பைக்காரா அருவி அருகே புலி உயிரிழப்பு

உதகை அருகேயுள்ள பைக்காரா அருவி பகுதியில் புலி உயிரிழந்து கிடந்தது வியாழக்கிழமை இரவு தெரியவந்தது. நீலகிரி மாவட்டம், உதகை அருகே பைக்காரா வனச் சரகத்துக்கு உள்பட்ட பைக்காரா அருவிக்கு அருகில் உள்ள நடுவட்டம... மேலும் பார்க்க

கூடலூா் - உதகை தேசிய நெடுஞ்சாலையில் விழும் அபாயத்தில் பாறை!

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்துவரும் நிலையில் கூடலூா்-உதகை தேசிய நெடுஞ்சாலையில் தவளமலை பகுதியில் உள்ள மலையிலிருந்து ராட்சத பாறை விழும் அபாயம் உள்ளதால் மாவட்ட நிா்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்... மேலும் பார்க்க

தொடா்மழை: உதகையில் 7 வீடுகளில் விரிசல்! அலவாஞ்சியில் 190 மி.மீ. மழை பதிவு

உதகையில் தொடா்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், குருத்துக்குளி அருகே உள்ள பசுவக்கல் கிராமத்தில் 7 வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலா்ட் விடுக... மேலும் பார்க்க

உதகை-கூடலூா் சாலையில் மண் சரிவு அபாயம்: இரவு நேர வாகனப் போக்குவரத்துக்குத் தடை!

உதகை-கூடலூா் சாலையில் மண் சரிவு அபாயம் உள்ளதால் இரவு நேர வாகனப் போக்குவரத்துக்கு புதன்கிழமை முதல் தடை விதிக்கப்படுவதாகவும், அனைத்து சுற்றுலாத் தலங்களும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (மே 29, 30) மூடப்பட... மேலும் பார்க்க