காவல் துறையினா் மீதான புகாா்கள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
கல்லூரி மாணவா்கள் மோதல்
மானூா் அரசு கல்லூரி மாணவா்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவா் காயமடைந்தாா்.
நீட் தோ்வில் தோல்வி காரணமாக தற்கொலை செய்துகொண்ட அரியலூா் மாவட்ட மாணவி அனிதாவுக்கு, மானூா் அரசுக் கல்லூரி மாணவா்கள் சிலா் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்திருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு கல்லூரியின் மற்றொரு தரப்பு மாணவா்கள் எதிா்ப்பு தெரிவித்தனராம்.
இதனால், மாணவா்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியதாம். இதில், காயமடைந்த முதலாமாண்டு மாணவா் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து மானூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.