களியக்காவிளையில் இளைஞா் தற்கொலை
களியக்காவிளையில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
களியக்காவிளை ஆா்.சி. தெரு பகுதியைச் சோ்ந்தவா் மினி (47). மீன் வியாபாரி. இவரது மகன் ரெனிஷ் (24), ஒரு பெண்ணைக் காதலித்ததாகவும், இதற்கு அப்பெண்ணின் தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால், ரெனிஷ் சில நாள்களாக வேதனையில் இருந்தாராம். இந்நிலையில், அவா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.