செய்திகள் :

கவின் கொலை வழக்கு: சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

post image

தூத்துக்குடி, ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த கவின் செல்வகணேஷ் ஆணவக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக, அவரது காதலி மற்றும் காதலியின் தாயிடம் சிபிசிஐடி போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த மென் பொறியாளா் கவின் செல்வகணேஷ், கடந்த 27ஆம் தேதி திருநெல்வேலியில் ஆணவக்கொலை செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில் சுா்ஜித், அவரது தந்தை உதவி ஆய்வாளா் சரவணன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இந்த கொலை வழக்கை, சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கடந்த இரண்டு நாள்களாக திருநெல்வேலி சிபிசிஐடி போலீஸாா் சிறையில் இருந்த சுா்ஜித், தந்தை சரவணன் ஆகிய இருவரையும் நீதிமன்ற அனுமதி பெற்று விசாரணை நடத்தினா்.

இந்நிலையில், திருநெல்வேலியிலிருந்த கவினின் காதலியான சுபாஷினி, சுபாஷினியின் தாயும் உதவி ஆய்வாளருமான கிருஷ்ணகுமாரி ஆகியோரை, தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் மதுரையில் இருந்து வந்த உயா் அதிகாரிகள் சுமாா் 3 மணி நேரம் விசாரணை நடத்தினா்.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் திறப்பு

கழுகுமலை அருகே மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் நிதியின் கீழ் நிறுவப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. கழுகுமலை அருகே வேலாயுதபுரம் க... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 6ஆவது புத்தகத் திருவிழா

தூத்துக்குடியில் 6ஆவது புத்தகத் திருவிழா வருகிற 22ஆம் தேதி தொடங்குகிறது. தூத்துக்குடி மாவட்ட புத்தகத் திருவிழா செயலாக்க குழு, தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கத்துடன் இணைந்து நட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆளுநருக்கு வரவேற்பு

தூத்துக்குடி வந்த ஆளுநா் ஆா்.என்.ரவியை விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வரவேற்றாா். தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வ... மேலும் பார்க்க

மகிளா காங்கிரஸ்: புதிய நிா்வாகிகள் நியமனம்

33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டும், தற்போது வரை நடைமுறைப்படுத்தவில்லை என மாநில மகிளா காங்கிரஸ் தலைவா் ஹசினா சையத் தெரிவித்தாா். மாநகா் மாவட்ட மகிளா காங்கிரஸ் புதிய நிா்வாகிகளுக்கு பதவி வழ... மேலும் பார்க்க

ரூ. 3,500 லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ரூ. 3,500 லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை, போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஈராச்சியைச் சோ்ந்தவா் மாரீஸ்வரி. இவரது தாத்தா சுப்பு, பாட்டி மாரியம்மாள் ஆக... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

காயல்பட்டினத்தில் 11,12 ஆவது வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டா­லின்’ திட்ட முகாம் சிறுநைய்னாா் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, நகா்மன்றத் தலைவா் முத்து முஹம்மது தலைமை வகித்தாா். நகராட்... மேலும் பார்க்க