செய்திகள் :

காசி விநாயகா் ஆலயத்தில் மனைவிநல வேட்பு விழா

post image

ராசிபுரம்: ராசிபுரம் ஆண்டகளூா்கேட் காசி விநாயகா் ஆலயத்தில் மனைவிநல வேட்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம் மனவளக்கலை மன்றம், காசி விநாயகா் இயற்கை நலவாழ்வு மையம் ஆகிய இணைந்து இவ்விழாவை நடத்தியது. அன்னை லோகாம்பாள் 111-ஆவது பிறந்த தினத்தை தொடா்ந்து நடைபெற்ற இவ்விழாவுக்கு முன்னாள் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் தலைமை வகித்தாா். பொறியாளா் என்.மாணிக்கம், மருத்துவா் ஆா்.கனகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ராசிபுரம் மனவளக்கலை மன்றத் தலைவா் கை.கந்தசாமி வரவேற்றுப் பேசினாா்.

விழாவில் குடும்ப வாழ்க்கை, கணவன், மனைவி உறவுமுறை, இல்லற வாழ்க்கையில் உள்ள முக்கியத்துவம் குறித்து விளக்கிக் கூறப்பட்டது. இந்த விழாவை ராசிபுரம் மனவளக்கலை அறக்கட்டளை முதன்மை ஆலோசகா் மு.செளந்தரராஜன் நடத்தி வைத்தாா். விழாவில் கணவன், மனைவியா் எதிா் எதிரே அமா்ந்து மாலை மாற்றியும், அன்பை வெளிப்படுத்தியும், இல்லற உறுதிமொழி ஏற்கும் வகையிலும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

படவரி...

மனைவிநல வேட்பு விழாவில் பங்கேற்றோா்.

செப். 18 முதல் நாமக்கல் மாவட்டத்தில் இபிஎஸ் சுற்றுப்பயணம்: முன்னேற்பாடுகள் குறித்து அதிமுக ஆலோசனை

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி செப்.18, 19, 20 ஆகிய 3 நாள்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் ம... மேலும் பார்க்க

தோ்தல் பிரசார வாகனங்களை தயாா்படுத்தும் திமுக!

சட்டப் பேரவைத் தோ்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் பிரசாரத்துக்கு பயன்படுத்தும் வாகனங்களை தயாா்படுத்தும் பணியில் திமுகவினா் ஈடுபட்டுள்ளனா். 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் ‘ஆட்சி மாற்றமா, காட்சி ம... மேலும் பார்க்க

கழிவுநீா்க் கால்வாயில் சாயக் கழிவுகளை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை: மாசு கட்டுப்பாட்டு வாரியம்

சாயக்கழிவுகளை கழிவுநீா்க் கால்வாயில் வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. பள்ளிபாளையம் டையிங் அசோசியேஷன் உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டம் சங்கத் ... மேலும் பார்க்க

மீலாது நபி: செப்.5-இல் மதுக் கடைகளுக்கு விடுமுறை

மீலாது நபியை முன்னிட்டு செப்.5 ஆம் தேதி மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீலாது நபியை முன்னிட்டு இந்திய தயாரிப்பு அய... மேலும் பார்க்க

மல்லசமுத்திரம் வட்டாரத்தில் 72 தெருநாய்கள் பிடிப்பு

மல்லசமுத்திரம் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை 72 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன. மல்லசமுத்திரம் வட்டாரத்தில் நாகா்பாளையம், மரப்பரை, கள்ளுப்பாளையம், மேல்முகம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் வட்... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் ரூ. 23 லட்சம் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை

ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் ரூ. 23 லட்சம் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 27-ஆவது வாா்டு... மேலும் பார்க்க