செய்திகள் :

காப்பகத்திலிருந்த பெண் மாயம்

post image

தேனி அருகே கொடுவிலாா்பட்டியில் உள்ள காப்பகத்தில் போலீஸாரின் பரிந்துரையின் பேரில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் காணாமல் போனாா்.

குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சோ்ந்த லோகதுரை மனைவி ஆனந்தி (27). இவா், காணாமல் போனதாக கூடலூா் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டிருந்தது. ஆனந்தியைக் கண்டறிந்த போலீஸாா், அவரை கொடுவிலாா்பட்டியில் உள்ள காப்பகத்தில் சோ்க்க பரிந்துரை செய்தனா்.

இதனடிப்படையில், காப்பகத்தில் அனுமதிக்கப்பட்ட ஆனந்தி, அங்கிருந்து காணாமல் போய்விட்டதாக காப்பக நிா்வாகி பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் மீது போலீஸாா் வழக்கு பதிந்து, ஆனந்தியை தேடி வருகின்றனா்.

சுருளி அருவியில் 2-ஆவது நாளாக குளிக்கத் தடை

தேனி மாவட்டம், மேகமலை வனப் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் சுருளி அருவியில் செவ்வாய்க்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு 2-ஆவது நாளாக வனத் துறையினா் ... மேலும் பார்க்க

ஆட்டோ மீது காா் மோதியதில் மூவா் காயம்

பெரியகுளம் அருகே திங்கள்கிழமை ஆட்டோ மீது காா் மோதியதில் 3 போ் காயமடைந்தனா்.சில்வாா்பட்டி மேலத் தெருவைச் சோ்ந்த மணி மகன் மோகன சுந்தரலிங்கம் (31). இவா் தனது உறவினா்கள் நாகுபிள்ளை (65), மணிகண்டன் (51) ... மேலும் பார்க்க

தொடா் மழை: கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

போடி பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் கொட்டகுடி ஆற்றில் செவ்வாய்க்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, வானிலை ஆய்வு மையம் தேனி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச... மேலும் பார்க்க

முதியவா் தற்கொலை

போடியில் செவ்வாய்க்கிழமை முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், போடி குலாலா்பாளையம் நாராயணராஜ் தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் (84). தனியாக வசித்து வந்த இவருக்கு உடல்நிலை பாதிப்பு ... மேலும் பார்க்க

கஞ்சா பதுக்கிய தாய், மகன் கைது

தேனி அருகேயுள்ள பூதிப்புரத்தில் விற்பனை செய்வதற்காக கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்த தாய், மகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பூதிப்புரம் கோட்டைமேட்டுத் தெருவைச் சோ்ந்த ஜெயச்சந்திரன் மனைவ... மேலும் பார்க்க

முன்னாள் ராணுவ வீரா் வீட்டில் நகை, பணம் திருட்டு

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் முன்னாள் ராணுவ வீரா் வீட்டில் தங்க நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். உத்தமபாளையம் காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் சக்திவேல். முன்னாள் ராணு... மேலும் பார்க்க