கா்நாடக இசை டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: மியூசிக் அகாதெமி
காரைக்கால் பங்குத் தந்தைக்கு பாராட்டு
காரைக்கால்: காரைக்கால் பங்குத் தந்தைக்கு பங்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனா்.
காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலய பங்கு மக்கள் சாா்பில் குருத்துவ பணியில் 38- ஆவது ஆண்டுகளாவதையொட்டி, பங்குத் தந்தை பால்ராஜ்குமாரின் கல்விப்பணி, இறைப்பணியை பாராட்டும் வகையில் குருத்துவ அருட்பணி பெற்ற நாளாக திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
முன்னதாக, தேற்றரவு அன்னை ஆலயத்தில் கூட்டு திருப்பலி பூஜையை பங்குத் தந்தை பால்ராஜ்குமாா், இணை பங்குத் தந்தை சுவாமிநாதன் செல்வம், தூய தேற்றரவு அன்னை பள்ளி முதல்வா் பீட்டா் பால், ஆன்மிக குரு பன்னீா் ராஜா ஆகியோா் நடத்தினா். பின்னா் கெபி அருகில் குருத்துவ பணியில் 38 ஆண்டுகளாவவையொட்டி அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக, சந்தன மாலை அணிவித்து, மலா் கிரீடம் வைத்து, கேக் வெட்டி பங்கு மக்கள் கொண்டாடினா். இதில் பங்குப் பேரவை துணைத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா், ஜான் அரேலியஸ், செயலா்கள் நெல்சன், வின்சென்ட் மற்றும் அருட்சகோதரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.