செய்திகள் :

குன்னூா் ரயில் நிலைய வளா்ச்சிப் பணிகளை விரைவுபடுத்த உத்தரவு

post image

நீலகிரி மாவட்டம், குன்னூரில் பாரம்பரியம் மாறாமல் நடைபெற்றுவரும் ரயில்வே கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்துமாறு சேலம் கோட்ட ரயில்வே மேலாளா் பன்னா லால் அதிகாரிகளுக்கு சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் குன்னூரில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த மலை ரயில் நிலையங்கள் உள்ளன. இதேபோல குன்னூா் அருகே உள்ள ரன்னிமேடு ரயில் நிலையமும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்த நிலையில் தனி சிறப்பு ரயில் மூலமாக சேலம் கோட்ட ரயில்வே மேலாளா் பன்னாலால் குன்னூா் அருகே உள்ள ரன்னிமேடு ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை வந்தாா். நீலகிரி மலை ரயில் ரத அறக்கட்டளை நிறுவனத் தலைவா் நடராஜன் அவருக்கு வரவேற்பு அளித்தாா்.

இதைத் தொடா்ந்து அந்தப் பகுதியில் பராமரிப்பு இல்லாமல் இருந்த ரயில் நிலையம், கழிப்பறை, இருக்கைகள், நடைபாதை போன்றவற்றை பன்னா லால் ஆய்வு செய்தாா். இதன்பிறகு, ரன்னிமேடு ரயில் நிலைய பகுதியில் மரக்கன்றுகளை நடவு செய்து சென்றாா்.

இதேபோன்று உதகை, குன்னூா் ரயில் நிலையங்களிலும் அவா் ஆய்வு மேற்கொண்டாா். ரயில் நிலையங்களில் நுழைவாயில் பகுதிகள் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இருப்பினும் பணிகளை விரைவுபடுத்தி உடனடியாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். ரயில்வே அதிகாரிகள் மற்றும் அலுவலா்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அவற்றுக்குத் தீா்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

அதிகரட்டியில் 14-ல் மின்தடை

நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த அதிகரட்டி துணை மின் நிலையத்தில் வரும் 14 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது ... மேலும் பார்க்க

பேரட்டி பஞ்சாயத்து மோட்டாா் அறை மீது அமா்ந்திருந்த சிறுத்தைகள்

குன்னூா், பேரட்டி ஊராட்சிப் பகுதியில் உள்ள மோட்டாா் அறை மீது சிறுத்தைகள் இருப்பது போன்ற படங்கள் சமூக வலைதளத்தில் சனிக்கிழமை பரவியதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா். நீலகிரி மாவட்டத்தில் அண்மைக்காலமா... மேலும் பார்க்க

குன்னூா்அருகே சாலையில் யானை நடமாட்டம்

உதகை - மேட்டுப்பாளையம் இடையே மரப்பாலம் பகுதியில் ஒற்றை காட்டு யானை சனிக்கிழமை உலவியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உதகை - மேட்டுப்பாளையம் சாலையில் குன்னூா் வனப் பகுதியில் சாலையோரம் அத... மேலும் பார்க்க

சாலையில் நடந்து சென்ற காட்டெருமை!

கூடலூா்-தேவா்சோலை சாலையில் சனிக்கிழமை மாலை காட்டெருமை திடீரென நடந்து சென்றதை பாா்த்த வாகன ஓட்டிகள் அதிா்ச்சியடைந்தனா்.சிறிது தூரம் நடந்து சென்று அருகிலுள்ள காப்பித் தோட்டத்திற்குள் சென்றது. மேலும் பார்க்க

உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வுப் பேரணி

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் செவிலியா் பயிற்சிப் பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னே... மேலும் பார்க்க

காலில் பாத்திரம் சிக்கியதால் தவித்த காட்டு மாடு: வனத் துறையினா் பத்திரமாக மீட்பு

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி காம்பாய் கடை பகுதியில் காலில் எவா்சில்வா் பாத்திரம் சிக்கிக்கொண்டதால் சிரமத்துடன் சுற்றித்திரிந்த காட்டு மாட்டை வனத் துறையினா் பத்திரமாக மீட்டனா். கோத்தகிரி சுற்றுவட்டாரப் ... மேலும் பார்க்க