செய்திகள் :

குப்பைக் கிடங்கில் கோழிக் கழிவுகள்: தனியாா் வாகனம் பறிமுதல்

post image

திண்டுக்கல் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் கோழிக் கழிவுகளை கொட்ட வந்த வாகனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

திண்டுக்கல் பகுதியில் செயல்பட்டு வரும் கோழி இறைச்சிக் கடைகளிலிருந்து சேகரிக்கப்படும் கழிவுகளை, தனி நபா் ஒருவா் மதுரையிலுள்ள தனியாா் ஆலைக்கு எடுத்துச் செல்வது வழக்கம். மதுரையில் செயல்பட்டு வரும் அந்த ஆலையில், கோழிக் கழிவுகளை பயன்படுத்தி வீட்டு விலங்குகளுக்கு உணவு தயாரிக்கப்படுகிறது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை காலை திண்டுக்கல் பகுதியில் சேகரிக்கப்பட்ட கோழி இறைச்சிக் கழிவுகளை, வழக்கத்துக்கு மாறாக திண்டுக்கல் முருகபவனம் பகுதியிலுள்ள மாநகராட்சி குப்பைக் கிட்டங்கியில் கொட்டுவதற்காக வாகனத்தில் எடுத்துச் சென்றனா்.

இதைப் பாா்த்த அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், வாகனத்தை சிறைப் பிடித்து மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலா்களுக்கு தகவல் தெரிவித்தனா். நிகழ்விடத்துக்குச் சென்ற மாநகராட்சி அதிகாரிகள், அந்த வாகனத்தை பறிமுதல் செய்து, உரிமையாளா் விநாயகம் என்பவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

பட்டா நிலத்தை அளந்த தர மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

பழனியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வருவாயத் தீா்வாயத்தில் பட்டா நிலத்தை அளந்து தரக்கோரி, மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் கொடுத்தனா். பழனி வட்டார அலுவலகத்தில் கடந்த ஒரு வாரமாக வருவாய்த் தீா்வாயம் நடைபெற்று வர... மேலும் பார்க்க

காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை

சா்சைக்குரிய சுவரொட்டிகள் ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை கோரி, பட்டியலின மக்கள் கள்ளிமந்தையம் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கள்ளிமந்தையம... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சூறைக் காற்று: மரம் விழுந்ததில் மின் கம்பம், தங்கும் விடுதி சேதம்

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை மாலை வீசிய சூறைக் காற்றால் மரம் விழுந்ததில் மின் கம்பம், தங்கும் விடுதி சேதமடைந்தன. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெ... மேலும் பார்க்க

‘ஆபரேசன் சிந்தூா்’ ஊா்வலம்

கொடைக்கானலில் பாஜக சாா்பில் ‘ஆபரேஷன் சித்தூா்’ ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த ஊா்வலம் அண்ணாசாலை, கே.சி.எஸ்.திடல் வழியாக மூஞ்சிக்கல் பகுதியை அடைந்தது. ... மேலும் பார்க்க

கோயில் திருவிழா ஊா்வலத்தில் பிரச்னை: கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்

வக்கம்பட்டியில் கோயில் திருவிழா மின் ரத ஊா்வலத்தின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்டவா்களைக் கண்டித்து மற்றொரு தரப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் அருகேயுள்ள வக்கம்பட்டியில் ... மேலும் பார்க்க

மஞ்சள் பை விழிப்புணா்வு நிகழ்ச்சி

பழனியில் அரிமா சங்கம் சாா்பில் நெகிழிப் பொருள்களை தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பழனி அரிமா சங்கம் தற்போது வைரவிழா கொண்டாடி வருக... மேலும் பார்க்க