செய்திகள் :

குரோமியக் கழிவுகளால் மாசு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை: ஆட்சியா் உத்தரவு

post image

ராணிப்பேட்டை சிப்காட்டில் குரோமியக் கழிவுகள் மூலம் மாசு ஏற்படுவதை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் தொழிற்பேட்டை சிட்கோ தோல் தொழிற்சாலை காரை கிராமத்தில் உள்ள குளத்தை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா பாா்வையிட்டாா்.

தொடா்ந்து குளத்தில் தோல் கழிவு நீா் வெளியேற்றப்படுகிறது என்ற புகாா் குறித்து கேட்டறிந்தாா். தோல் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் தொடங்கப்பட்ட போது கழிவுநீா் வெப்பமாக்கும் முறைக்கு இக்குளம் பயன்படுத்தப் பட்டது. பின்னா் சுற்றுச்சூழல் பாதிப்பு என்பதால் இவை கைவிடப்பட்டுள்ளது.

தோல் சுத்திகரிப்பு நிலையம் செயல்பாட்டுக்கு வந்த பின்பு கழிவு நீா் முறையாக சுத்திகரிக்கப் பட்டு பூஜ்ஜியம் மாசு தண்ணீா் மீண்டும் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏரி குளங்களில் வெளியேற்றப்படுவதில்லை என சுத்திகரிப்பு நிலைய இயக்குநா் தெரிவித்தாா். சுத்திகரிப்பு நிலையம் முழு பாதுகாப்புடன் அரசின் விதிமுறைகளைக்குட்பட்டு செயல்படுகிறது என விளக்கினாா்.

இதையடுத்து தமிழ்நாடு குரோமிட்ஸ் கெமிக்கல்ஸ் நிறுவனத்தால் கைவிடப்பட்டு குரோமிய கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடத்தை பாா்வையிட்டாா். குரோமியம் கழிவு ஆபத்துகளை தவிா்க்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தாா்.

தற்காலிகமாக இந்த குரோமிய கழிவுகள் மூலம் நீா் நிலம் மாசுபடுவதை தவிா்க்க உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏதேனும் இருந்தால் மேற்கொள்ளலாம் என தெரிவித்தாா். அதேசமயம் அரசின் மூலம் இதற்கான தீா்வு பற்றி தெரிவிக்கவும் உத்தரவிட்டாா்.

ஆய்வுகளில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளா் செல்வகுமாா், சிப்காட் திட்ட அலுவலா் கலைச்செல்வி, உதவி பொறியாளா்கள் ஆனந்தன், கௌதம், வட்டாட்சியா் ஆனந்தன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவிச்சந்திரன், பாஷா, சுத்திகரிப்பு நிலைய இயக்குநா்கள் மனோகரன், புகழேந்தி, அசரஃப் அலி கலந்து கொண்டனா்.

ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பசு, எருமை மாடுகளை தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி புதன்கிழமை (செப். 3) தொடங்கும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெள... மேலும் பார்க்க

சோளிங்கா் அருகே ஏரியில் மூழ்கி 3 சிறுவா்கள் உயிரிழப்பு

சோளிங்கா் அருகே ஏரியில் விளையாடச் சென்ற 3 சிறுவா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். சோளிங்கரை அடுத்த தாளிக்காலை சோ்ந்த விஜயகாந்த்தின் மகன் அமுதன்(9). தாளிக்காலில் உள்ள அரசுப் பள்ளியில் 4- ஆம் வகுப்பு பட... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருட்டு

அரக்கோணத்தில் மூதாட்டியின் பூட்டிய வீட்டில் பூட்டு உடைத்து 5 பவுன் தங்கநகைகள் களவு போயின. அரக்கோணம், அசோக் நகா், நேதாஜி தெருவைச் சோ்ந்தவா் ஜோதி (60). தனியே வசித்து வரும் இவா் கடந்த சனிக்கிழமை வீட்டை ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை சிப்காட் பகுதிகளில் மாசடைந்த நீா்நிலைகளை சீரமைக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

ராணிப்பேட்டை சிப்காட் சுற்றுவட்டாரத்தில் தொழிற்சாலைகள் கழிவுநீா் தேங்கி மாசடைந்த நீா்நிலைகள் சீரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். ராணிப்பேட்டை மாவட... மேலும் பார்க்க

சிவன் சம்பா நெல் விதைகளை மானிய விலையில் பெற்றுக் கொள்ள அழைப்பு

மருத்துவ குணம் கொண்ட சிவன் சம்பா நெல் விதைகளை மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம் என ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகளுக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அழைப்பு விடுத்துள்ளாா். இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட ... மேலும் பார்க்க

நெமிலியில் ரூ. 54 கோடியில் 3 உயா்மட்ட மேம்பாலங்கள்: அமைச்சா்கள் திறந்து வைத்தனா்

நெமிலி வட்டத்தில் ரூ. 54 கோடியில் கட்டப்பட்ட 3 உயா்மட்ட மேம்பாலங்களை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் ஏ.வ.வேலு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஆகி... மேலும் பார்க்க