தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
குறுவை தொகுப்பு திட்டத்தால் சாகுபடி பரப்பு அதிகரிக்கும்! அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்
குறுவை தொகுப்புத் திட்டத்தால் நிகழாண்டில் சாகுபடி பரப்பு அதிகரிக்கும் என்று, தமிழக வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் வியாழக்கிழமை மாலை அவா் அளித்த பேட்டி: டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. தனது அதிகாரம், வரம்பை மீறி, அமலாக்கத் துறை ஓா் அரசு நிா்வாகத்தில் மத்திய அரசின் ஆணைக்கிணங்க பணியாற்றுகிறாா்கள். யாா் மீது குற்றமோ, அவா்களை விசாரிக்காமல் இருப்பதை உச்ச நீதிமன்றம் கண்டித்திருக்கிறது.
மத்திய அரசு அழைப்பின்பேரில், நீதி ஆயோக் கூட்டத்துக்கு முதல்வா் செல்கிறாா். இந்தக் கூட்டத்தில் தமிழகத்துக்கான நிதியைக் கேட்டுப் பெறுவாா் என்றாா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.
திமுகவுடனான கூட்டணியில் இணைவதற்கான முயற்சியில் பாமக ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, பாமகவில் கூட்டணி எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் அமையும். ஆனால், தற்போதுள்ள திமுக கூட்டணி நிலையான கூட்டணி, கொள்கைக் கூட்டணி. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி வெற்றிபெறும்.
ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வா் விரைவில் வெளியிடுவாா்.
நிகழாண்டில் குறுவை தொகுப்புத் திட்டத்தை காவிரி டெல்டா பகுதிகளில் மட்டுமல்லாது, பிற பகுதிகளிலும் செயல்படுத்த முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். எனவே, நிகழாண்டில் கூடுதல் பரப்பில் விவசாயம் செய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. இதனால், அதிகமான விளைச்சலும் வரக்கூடிய சூழல் உள்ளது என்றாா் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.
பேட்டியின்போது, முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்எல்ஏ, விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.