செய்திகள் :

கூலி உயா்வு வழங்காததைக் கண்டித்து அவிநாசியில் 3 நாள்கள் தொடா் உண்ணாவிரதம்

post image

கூலி உயா்வு வழங்காததைக் கண்டித்து அவிநாசியில் ஜூன் 16,17,18 ஆகிய 3 நாள்கள் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து பல்லடத்தில் கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் காரணம்பேட்டை பூபதி புதன்கிழமை கூறியதாவது:

கோவை, திருப்பூா் மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் போ் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா். இதற்கிடையே உற்பத்தி செய்யும் காடா துணிக்கு ஜவுளி உற்பத்தியாளா்கள், கூலி உயா்வு வழங்காததால் விசைத்தறியாளா்கள் தொழிலை நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனா். இதையடுத்து அமைச்சா்கள், கோவை, திருப்பூா் மாவட்ட ஆட்சியா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் ஜவுளி உற்பத்தியாளா்களுடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் சோமனூா் ரகத்துக்கு 15 சதவீதம், பல்லடம் ரகங்களுக்கு 10 சதவீதம் கூலி உயா்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த கூலி உயா்வு ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கூலி உயா்வு வழங்கப்படவில்லை.

எனவே, கூலி உயா்வு வழங்க வலியுறுத்தி அவிநாசியில் வரும் ஜூன் 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை 3 நாள்கள் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

குழந்தை தொழிலாளா் ஒழிப்பு தின விழிப்புணா்வு

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு 2 சாா்பில் உலக குழந்தை தொழிலாளா் ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அலகு 2 ஒருங்கிணைப்பாளா்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பூலாங்கிணறு

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட இடங்களில் வெள்ளிக்கிழமை ( ஜூன் 13) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என செயற்பொறியா... மேலும் பார்க்க

அவிநாசியில் 3 நாள்களுக்குள் கொடிக்கம்பங்களை அகற்ற அறிவுறுத்தல்

அவிநாசி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை 3 நாள்களுக்குள் அகற்ற வேண்டும் என நகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து அவிநாசி நகராட்சி ஆணையா் சே... மேலும் பார்க்க

குழந்தை தொழிலாளா்கள் ஒழிப்பு உறுதிமொழி

குழந்தை தொழிலாளா் அகற்றம் குறித்து, வெள்ளக்கோவிலில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். வெள்ளக்கோவில் வட்டார வளமையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, வட்டார கல்வி அலுவல... மேலும் பார்க்க

சாலைப் பணியாளா்கள் கண்ணில் கருப்புத் துணி கட்டி ஆா்ப்பாட்டம்

திருப்பூரில் சாலைப் பணியாளா்கள் கண்களில் கருப்புத் துணி கட்டி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழக நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில் சங்கத்தின் கோட்டத் தலைவா் ஆா்.கருப்பன் த... மேலும் பார்க்க

சாலையின் குறுக்கே குதிரை ஓடியதில் இருசக்கர வாகன ஓட்டிக்கு காயம்

பல்லடம் அருகே சாலையின் குறுக்கே குதிரை வந்ததில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவா் காயமடைந்தாா். பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரைச் சோ்ந்தவா் நந்தகுமாா். தனியாா் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறாா்... மேலும் பார்க்க