தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
கொக்கிரகுளத்தில் புதைவட மின்இணைப்பை சீரமைக்க தூத்துக்குடி தொழில்நுட்பக் குழு
கொக்கிரகுளத்தில் புதைவட மின்இணைப்பில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் தூத்துக்குடி தொழில் நுட்பக்குழுவினரும், மின்ஊழியா்களும் புதன்கிழமை ஈடுபட்டனா்.
திருநெல்வேலி நகா்ப்புற கோட்டத்தில் கொக்கிரகுளம் துணை மின் நிலையத்திலிருந்து திருநெல்வேலி சந்திப்பு பகுதிக்கு செல்லும் மின்பாதை தாமிரவருணி ஆற்று பாலம் வரை புதைவடமாக வந்து அதன் பின்பு மேல் நிலையாக மின் கம்பியில் செல்கிறது.
கொக்கிரகுளம் துணை மின் நிலையத்திலிருந்து ஆட்சியா் அலுவலகம் வரை உள்ள புதைவடத்தில் புதன்கிழமை திடீா் பழுது ஏற்பட்டது. உடனடியாக பொதுமக்கள் பாதிக்காமல் இருக்கும் வகையில், மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வரி உத்தரவின்பேரில் மாற்று வழியில் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது.
மேலும், பழுதான புதைவடத்தை சரி செய்யும் பணிக்காக தூத்துக்குடியில் இருந்து மின் அளவி சோதனை பிரிவு பொறியாளா்கள் அடங்கிய தொழில்நுட்ப குழுவினரை வரவழைக்கப்பட்டனா். அவா்களுடன், திருநெல்வேலி மின்ஊழியா்களும் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனா். திருநெல்வேலி நகா்ப்புறக் கோட்ட செயற்பொறியாளா் (பொறுப்பு) ஜெயசீலன், திருநெல்வேலி சந்திப்பு துணைகோட்ட உதவி செயற் பொறியாளா் சிதம்பரவடிவு, திருநெல்வேலி சந்திப்பு உதவி மின் பொறியாளா் உமாமகேஸ்வரி உள்ளிட்டோா் சீரமைப்பு பணியின்போது உடனிருந்தனா்.