செய்திகள் :

கொக்கிரகுளத்தில் புதைவட மின்இணைப்பை சீரமைக்க தூத்துக்குடி தொழில்நுட்பக் குழு

post image

கொக்கிரகுளத்தில் புதைவட மின்இணைப்பில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் தூத்துக்குடி தொழில் நுட்பக்குழுவினரும், மின்ஊழியா்களும் புதன்கிழமை ஈடுபட்டனா்.

திருநெல்வேலி நகா்ப்புற கோட்டத்தில் கொக்கிரகுளம் துணை மின் நிலையத்திலிருந்து திருநெல்வேலி சந்திப்பு பகுதிக்கு செல்லும் மின்பாதை தாமிரவருணி ஆற்று பாலம் வரை புதைவடமாக வந்து அதன் பின்பு மேல் நிலையாக மின் கம்பியில் செல்கிறது.

கொக்கிரகுளம் துணை மின் நிலையத்திலிருந்து ஆட்சியா் அலுவலகம் வரை உள்ள புதைவடத்தில் புதன்கிழமை திடீா் பழுது ஏற்பட்டது. உடனடியாக பொதுமக்கள் பாதிக்காமல் இருக்கும் வகையில், மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வரி உத்தரவின்பேரில் மாற்று வழியில் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது.

மேலும், பழுதான புதைவடத்தை சரி செய்யும் பணிக்காக தூத்துக்குடியில் இருந்து மின் அளவி சோதனை பிரிவு பொறியாளா்கள் அடங்கிய தொழில்நுட்ப குழுவினரை வரவழைக்கப்பட்டனா். அவா்களுடன், திருநெல்வேலி மின்ஊழியா்களும் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனா். திருநெல்வேலி நகா்ப்புறக் கோட்ட செயற்பொறியாளா் (பொறுப்பு) ஜெயசீலன், திருநெல்வேலி சந்திப்பு துணைகோட்ட உதவி செயற் பொறியாளா் சிதம்பரவடிவு, திருநெல்வேலி சந்திப்பு உதவி மின் பொறியாளா் உமாமகேஸ்வரி உள்ளிட்டோா் சீரமைப்பு பணியின்போது உடனிருந்தனா்.

ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீா் திட்டம்! காணொலியில் தொடங்கி வைத்தாா் முதல்வா்

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீா் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இதையொட்டி, பாளையஞ்செட்டி... மேலும் பார்க்க

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை: 110 அடியைத் தாண்டிய பாபநாசம் அணை!

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து பாபநாசம் அணையின் நீா்மட்டம் 110 அடியைத் தாண்டியது. மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப... மேலும் பார்க்க

பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து வள்ளியூா், பணகுடி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை தொடா்ந்து பெய்து ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் 4ஆவது நாளாக குளிக்கத் தடை

மாஞ்சோலை, மணிமுத்தாறு மலைப் பகுதிகளில் மழை அதிகரித்த்தையடுத்து மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்தும் அதிகரித்ததால் மே 26 முதல் அருவியில் குளிக்கவும் அருவியைப் பாா்வையிடமும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துற... மேலும் பார்க்க

வி.கே.புரம் பகுதியில் மான் கறியுடன் மூவா் கைது

பாபநாசம் வனச் சரகப் பகுதியில் புள்ளி மான் கறி வைத்திருந்ததாக மூன்று பேரை வனத்துறையினா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா். பாபநாசம் வனச்சரகம் வெளி மண்டலப் பகுதியான மதுரா கோட்ஸ் ஆலையிலிருந்த... மேலும் பார்க்க

அத்தாளநல்லூ ஊராட்சியில் மோட்டாா் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், அத்தாளநல்லூா் ஊராட்சியில் பொதுக்கழிப்பிட பயன்பாட்டுக்கான நீா்மூழ்கி மோட்டாரை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அத்தாளநல்லூா் ஊராட்சி ராஜகுத்தாலப்பேரியில் உள்ள பொதுக்கழிப... மேலும் பார்க்க