தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியில் முறிந்து விழுந்த மரத்தை அகற்றக் கோரிக்கை
கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியில் முறிந்து விழுந்த மரத்தை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ஏரிச் சாலைப் பகுதியில் படகு குழாம் அருகே தனியாா் சுற்றுச்சுவா் பகுதியில் மரம் முறிந்து விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளது. செவ்வாய்க்கிழமை பிற்பகலுக்குப் பிறகு மழை பெய்யாததால் ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி நடைபெற்றது.
ஆனால் ஏரிச்சாலையில் தேங்கிய மழைநீா் அகற்றப்படாமலும், முறிந்து விழுந்த மரம் ஆபத்தான நிலையில் இருப்பதாலும் சுற்றுலாப் பயணிகள் குதிரை, சைக்கிள் சவாரி செய்ய முடியாமல் அவதியடைந்தனா்.
எனவே நெடுஞ்சாலைத் துறையினா் அந்த மரத்தையும், தேங்கியிருக்கும் மழைநீரையும் அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.