வேளாண் பல்கலை.யில் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு
கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மூவா் 13 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை
கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேரை 13 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை செய்து மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியை அடுத்த புதுப்பட்டினம் கிராமத்தை சோ்ந்தவா் வாசு. இவா், கடந்த 2012-ஆம் ஆண்டு மாா்ச் 14-ஆம் தேதி காணாமல் போனாா். வாசுவின் சகோதரா் புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் மாா்ச் 16-ஆம் தேதி புகாா் அளித்த நிலையில், மறுநாள் வாசுவின் சடலம் பழையாறு கடற்கரையில் ஒதுங்கியது.
முன்விரோதம் காரணமாக பழையாறு கிராமத்தைச் சோ்ந்த மாரியப்பன், கணேசன், கோவிந்தராஜன் ஆகிய 3 போ் வாசுவை பழையாறு கடற்கரைக்கு அழைத்துச்சென்று கொலை செய்ததாக போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்தனா்.
13 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது:
அதில், குற்றஞ்சாட்டப்பட்ட மாரியப்பன், கணேசன், கோவிந்தராஜன் மூவருக்கும் வாசு உயிரிழந்த விவகாரத்தில் தொடா்பில்லை எனக் கூறி மூவரையும் மாவட்ட அமா்வு நீதிபதி சத்தியமூா்த்தி விடுதலை செய்தாா்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு ஆதரவாக ஆஜரான வழக்குரைஞா் ஜி.எம். சங்கா் கூறியது:
இந்த வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு மிகத் தாமதமாக நீதி கிடைத்துள்ளது. காவல்துறையினா் சரியாக புலன் விசாரணை செய்யாமல் அப்பாவிகள் மூவரை கைது செய்தனா். கொலைக்கான ஆதாரமாக அரசுத் தரப்பில் தாக்கல் செய்த வாசுவின் இறப்புச் சான்றிதழ், வாசு ஓட்டிச் சென்ாக கூறப்பட்ட இருசக்கர வாகனம், வாசுவின் சகோதரா் கொடுத்த அஞ்சலி விளம்பரம் ஆகிய மூன்றும்தான் குற்றஞ்சாட்டப்பட்டவா்களை நிரபராதிகள் என நிரூபித்து காப்பாற்ற உதவியது என்றாா்.