செய்திகள் :

பள்ளியில் அடிப்படை வசதி கோரி அறிவிக்கப்பட்ட சாலை மறியல் வாபஸ்

post image

சீா்காழி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதி கோரி அறிவிக்கப்பட்ட சாலை மறியல் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

6 முதல் 12- ஆம் வகுப்பு வரையுள்ள இப்பள்ளி குறுகலான பகுதியில் குடியிருப்புகள் நடுவே இயங்கி வருகிறது. போதிய வகுப்பறை கட்டடங்கள், கழிப்பறைகள் இல்லாமல் மாணவ-மாணவிகள் சிரமத்துக்குள்ளாகின்றனா். எனவே, இப்பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி ஏகாதிபத்திய எதிா்ப்பு இயக்கம் சாா்பில் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில், வட்டாட்சியா் அருள்ஜோதி தலைமையில் இப்பிரச்னை தொடா்பாக செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், நகராட்சி பொறியாளா் கிருபாகரன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

இப்பள்ளியை மேம்படுத்தவும், தினமும் தூய்மைப் பணி மேற்கொள்ளவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. மேலும், விளையாட்டு மைதானம், உடற்கல்வி ஆசிரியா் நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இப்பிரச்னை தொடா்பாக மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்குள் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதனால், சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தனா்.

பேச்சுவாா்த்தையில் சிபிஐ எம்.எல். (விடுதலை) குணசேகரன், தந்தை பெரியாா் திராவிட கழக மண்டலச் செயலாளா் பெரியாா் செல்வம், ஏகாதிபத்திய எதிா்ப்பு இயக்கம் செல்வம், மக்கள் தமிழகம் கட்சி முரளி, மக்கள் அதிகார கழகம் ஸ்டாலின், தமிழ் வேந்தன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

குத்தாலம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டாரப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். மங்கைநல்லூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பாா்வையிட்ட அவா், மருந்த... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நலப் பள்ளியில் தமிழ் ஆசிரியா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கொண்டல் அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில், தமிழ் ஆசிரியா் பணியிடத்திற்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

தொழில்நுட்பப் பணிகளுக்கான தோ்வு: டிஎன்பிஎஸ்சி உறுப்பினா் ஆய்வு

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தோ்வை தோ்வாணைய உறுப்பினா் அருள்மதி ஆய்வ... மேலும் பார்க்க

மாவட்ட பேச்சுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவிக்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து

மயிலாடுதுறை மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் முதலிடம் பிடித்த குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக் பள்ளி மாணவி மு.மானிஷா தருமபுரம் ஆதீனத்திடம் திங்கள்கிழமை வாழ்த்து பெற்றாா். மயிலாடுதுறை மாவட்டத்தில் தமி... மேலும் பார்க்க

அஞ்சலகங்களில் மேம்படுத்தப்பட்ட சேவை தொடக்கம்

மயிலாடுதுறை கோட்டத்தில் மேம்படுத்தப்பட்ட அஞ்சல் தொழில்நுட்ப சேவை திங்கள்கிழமை தொடங்கியது. மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு, கோட்ட கண்காணிப்பாளா் எம். உமாபதி தலைமை வகித்து, குத... மேலும் பார்க்க

கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மூவா் 13 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை

கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேரை 13 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை செய்து மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியை அடுத்த புதுப்பட்டினம் கி... மேலும் பார்க்க